நடைப்பயிற்சி மேற்கொள்வது இப்போது அதிகம் ஆகி உள்ளது. அது ஒரு விழிப்புணர்வு என்றுதான் நான் நினைக்கிறேன். ஜாகிங் போறேன், நாலு கிலோமீட்டர் நடந்தேன் என்பது ஒரு அலட்டலாகவும் இருக்கலாம். குழந்தைகளை யாரும் வெளியே போய் விளையாடச் சொல்வதில்லை. கண்டதை சாப்பிடாதே என்று தடுப்பதில்லை. ஆனால் வயதானவர்களை இப்படியே உட்கார்ந்திருந்தால் வெயிட் ஏறாதா, கொஞ்சம் நட என மிரட்டுகிறோம். எழுபது வயசில் ஏன் சாப்பிட ஆசை என்று கேள்வி கேட்கிறோம். எல்லாம் தலைகீழ். குத்துவிளக்கு மேல்நோக்கி எரிகிறது. அது தீபம். மின்சார பல்ப் தலைகீழாகத் தொங்குகிறது. அது முன்னேற்றம். என் கண்டுபிடிப்பில்லை . பட்டணத்தில் பூதம் படத்தில், அந்த பூதம் சொல்லும், "அடடே தலைகீழாகத் தொங்கும் தீபம்" என்று. மின்சார விளக்கு வந்தாலும், குத்துவிளக்கும் மெழுவர்த்தியும் இருக்கும். சிலவற்றை வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. அது போன்றதே நடை. நன்றாக உள்ளோம் என்பதற்கோர் அத்தாட்சி.
நான் நாள் தவறாது நடக்கிறேன். காலை வாக்கிங் இயற்கையுடனான தொடர்பு. இரவும் அதே வானம், செடி, கொடி, மரம்தான் சுற்றிலும். ஆனால் அவற்றுக்கும் தூக்கம் வந்து விடுகிறது. இருள் போர்த்திய வானம் மனதை உள்ளே செலுத்தி விடுகிறது. பளிச் என்ற நீலவானம் என்னுடன் பேசும். கருமையான வானம் ," உனக்கு அவன்தானே தோழன், காலை அவனுடன் பேசிக் கொள் , இப்போது, உன் உள்ளே உள்ள ஒன்றிடம் பேசு" என்று சொல்லி விலகி விடுகிறது. அந்த உரையாடலே இந்தக் கட்டுரை. தினம் இரவு வாக்கிங் சமயம், எங்கள் குடியிருப்பில் பெருச்சாளிகள் குறுக்கிடும். ஒன்றாவது நம் பாதையைக் கடந்து ஓடும். அதைக் கண்டாலே உடம்பு ஒரு மாதிரி சிலிர்த்து என்னமோ செய்யும். அதற்காகவே, காலையே நடைப்பயிற்சியை முடித்து விட வேண்டும் என நினைப்பேன். காலை அவை வெளியே வராது. ஏன்? ஏன்?
யாராலும் விரும்ப முடியாத, முகம் சுளிக்க வைக்கும் ஜந்து பெருச்சாளி. இருட்டில்தான் வெளிப்பட முடியும். பாதாளத்தில், ஆழத்தில் இருக்கும். மனித இதயம் ஒரு பாதாள உலகம்தான். பாதாளத்தில் நல்லதும் நிறையவே இருக்கும். அது போல் மனச்சுரங்கத்தில், நல்லவற்றுடன்,பெருச்சாளிகள் போன்ற, அருவருக்கத் தக்க எண்ணங்கள் இருக்கலாம். பெருச்சாளி அற்ற சுரங்கம் இருந்தால் நன்று. ஆனால் அப்படி இல்லையெனில் , வெளிச்சம் பாய்ச்ச்சுவதே அவற்றை விரட்ட வழி. அமைதி தருவன எல்லாம் நீலவானம் போன்றவை. அமைதியைத் துளி கெடுப்பதெல்லாம் இரவு வானம் போன்ற கருமை போர்த்திய எண்ணங்கள். சந்தேகம் இல்லை. யார்தான் கருமையை, இருட்டை, விரும்ப முடியும்? இரவும் பகலும் போல நம் விதியை வேண்டுமானால் இறைவன் எழுதுகிறான். ஆனால், டார்ச் வெளிச்சத்துக்கும் பெருச்சாளி ஓடி விடுமே? டார்ச் வெச்சுக்காதே என்று இறைவன் சொல்கிறானா, என்ன!! சக்தி மிக்க டார்ச்சுக்கு நாம் அனைவரும் சொந்தக்காரர்கள். அதை இயக்குவதும், இயக்காததும் நம் தேர்வு.
நான் நாள் தவறாது நடக்கிறேன். காலை வாக்கிங் இயற்கையுடனான தொடர்பு. இரவும் அதே வானம், செடி, கொடி, மரம்தான் சுற்றிலும். ஆனால் அவற்றுக்கும் தூக்கம் வந்து விடுகிறது. இருள் போர்த்திய வானம் மனதை உள்ளே செலுத்தி விடுகிறது. பளிச் என்ற நீலவானம் என்னுடன் பேசும். கருமையான வானம் ," உனக்கு அவன்தானே தோழன், காலை அவனுடன் பேசிக் கொள் , இப்போது, உன் உள்ளே உள்ள ஒன்றிடம் பேசு" என்று சொல்லி விலகி விடுகிறது. அந்த உரையாடலே இந்தக் கட்டுரை. தினம் இரவு வாக்கிங் சமயம், எங்கள் குடியிருப்பில் பெருச்சாளிகள் குறுக்கிடும். ஒன்றாவது நம் பாதையைக் கடந்து ஓடும். அதைக் கண்டாலே உடம்பு ஒரு மாதிரி சிலிர்த்து என்னமோ செய்யும். அதற்காகவே, காலையே நடைப்பயிற்சியை முடித்து விட வேண்டும் என நினைப்பேன். காலை அவை வெளியே வராது. ஏன்? ஏன்?
யாராலும் விரும்ப முடியாத, முகம் சுளிக்க வைக்கும் ஜந்து பெருச்சாளி. இருட்டில்தான் வெளிப்பட முடியும். பாதாளத்தில், ஆழத்தில் இருக்கும். மனித இதயம் ஒரு பாதாள உலகம்தான். பாதாளத்தில் நல்லதும் நிறையவே இருக்கும். அது போல் மனச்சுரங்கத்தில், நல்லவற்றுடன்,பெருச்சாளிகள் போன்ற, அருவருக்கத் தக்க எண்ணங்கள் இருக்கலாம். பெருச்சாளி அற்ற சுரங்கம் இருந்தால் நன்று. ஆனால் அப்படி இல்லையெனில் , வெளிச்சம் பாய்ச்ச்சுவதே அவற்றை விரட்ட வழி. அமைதி தருவன எல்லாம் நீலவானம் போன்றவை. அமைதியைத் துளி கெடுப்பதெல்லாம் இரவு வானம் போன்ற கருமை போர்த்திய எண்ணங்கள். சந்தேகம் இல்லை. யார்தான் கருமையை, இருட்டை, விரும்ப முடியும்? இரவும் பகலும் போல நம் விதியை வேண்டுமானால் இறைவன் எழுதுகிறான். ஆனால், டார்ச் வெளிச்சத்துக்கும் பெருச்சாளி ஓடி விடுமே? டார்ச் வெச்சுக்காதே என்று இறைவன் சொல்கிறானா, என்ன!! சக்தி மிக்க டார்ச்சுக்கு நாம் அனைவரும் சொந்தக்காரர்கள். அதை இயக்குவதும், இயக்காததும் நம் தேர்வு.
Unlock your trading potential with WinProFX, a trusted platform designed to help traders navigate the financial markets with confidence. Whether you are a beginner taking your first steps or an experienced trader looking to refine your strategies, WinProFX provides advanced tools, real-time market insights, and a user-friendly trading environment to support your goals. With a focus on innovation, security, and customer satisfaction, WinProFX empowers you to make informed decisions, manage risks effectively, and seize opportunities across global markets. Take control of your financial journey and experience a smarter way to trade with WinProFX.
பதிலளிநீக்கு