நேற்று எலியட்ஸ் பீச் சென்றோம். நீர்ப்பரப்பில் மட்டும்தான் கடை போடவில்லை. கடைகள் மயம் . ஒரு மணி நேரம் அங்கு சுற்றினால்,பஜ்ஜி சாப்பிடும் ஆசையை வென்று விடலாம். எங்கு திரும்பினும் பஜ்ஜி கடை. மணல்பரப்பு , அத்தனை பெரிய மணல்பரப்பு ரொம்பவும் அழுக்கு. கல்லூரி மாணவர்கள் ஏதோ சுத்தம் செய்வதாய்க் கூறுகிறார்கள்.ஆனால் பார்த்தால் தெரியும் அளவு முன்னேற்றம் ஏதும் இல்லை. அனைத்துத் தர மக்களுக்கும் பர்ஸுக்கு சரிப்பட்டு வரும் என்டர்டைன்மெண்ட். மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா என்கிறாரே வாலி, வானும் மண்ணும் நீரும் எல்லோருக்கும் பொது அல்லவோ? எளிய காட்டன் புடவைப் பெண்ணின் கால்களையும் ஜீன்ஸ் யுவதியின் கால்களையும் ஒரே மாதிரி நனைக்கும் அலைகள். ஓ திஸ் டர்ட்டி இண்டியா என்று வாயில் சரளமாக சொல்லிக் கொண்டு புழுதி படிந்த சுட்ட சோளத்தை உண்ணும் மக்கள். குதிரை சவாரிக்காக பழக்கப்பட்ட மெலிந்த குதிரைகள். இளம் காதல் ஜோடிகள். இத்தனைக்கு நடுவில்தான் சந்தித்தேன் அந்த என்ஜினியரை . அவனைப் பற்றிக் கூறும் முன் ஒன்று சொல்லி விடுகிறேன்.அழுக்காக இருந்தாலும் பாரத மாதா கீ ஜே தான்.சும்மா வாயில் வந்தபடியெல்லாம் அரசாங்கத்தையும் மற்றவரையும் திட்டிக் கொண்டு பிளாஸ்டிக் பையைக் கூட வீடுகளில் இருந்து அகற்றாதவர்கள் எல்லாம் வாய்க்கு ஒரு பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருப்பது மேல். மக்கள் தொகை நாளுக்கு நாள் வளர்பிறைச் சந்திரன் போல் பெருகி வரும் நாட்டில் மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்படும். இந்த சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் மாதத்தில், நிஜ இந்தியக் குடிமகனாக உணர்பவர்கள்,முதலில் சரவணா ஸ்டோரில் துணி வாங்கி விட்டு, "நாலு புடவை வாங்கியிருக்கேன் நாலு பிளாஸ்டிக் கவர் குடுங்க, சொந்தக்காரங்களுக்கு தனித்தனி கவர்ல தரணுமில்ல" என்று கேட்பதையாவது நிறுத்த வேண்டும். தனிமனித ஒழுக்கம் கடைப்பிடிக்காதவர்கள் மற்ற ஒருவன் ஒழுங்காக இல்லை என்று பேசுவது,நாட்டைத் திட்டுவது என்ற கேலிக்கூத்து செய்யத் தேவையில்லை. என்ஜினியரைப் பார்க்கலாம்,வாருங்கள்.
ஐஸ்க்ரீம் விற்கும் சிறுவன். அவன் அம்மா பஜ்ஜி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறாள். ஐஸ்க்ரீம் வண்டி ஒரு சிறிய fridge போல செயல்பட பாட்டரி மூலம் கரண்ட். அதில் ஏதோ கோளாறு. அந்தப் பையனுக்கு பதைபதைப்பு.நல்ல கூட்ட நேரம். "அம்மா பவர் வரலே,வந்து பாரு",ஒரு முறை பல முறை கூவி அழைக்கிறான்.அம்மாவுக்கோ,திரும்பக் கூட நேரம் இல்லை.ஒயரை எடுத்து என்னமோ செய்கிறான். மாற்றி மாற்றி அங்கே,இங்கே சொருகினான்.தட்டிக் கொட்டி,கருமமே கண்ணாயினார் என்பது போல் பத்து நிமிஷம் சுற்றுப்புற நினைவு மறந்து என்னமோ செய்தான். விளக்கு எரிந்து விட்டது. அவன் முகத்திலும்தான். பள்ளிகளும் கல்லூரிகளும் டிகிரி தருகின்றன. ஆனால் பேப்பரில் உள்ள டிகிரி ஒருவனை பொறியாளனாக்குவதில்லை. ஐஸ்க்ரீம் சிறுவன் டிகிரி இல்லாத உண்மை எஞ்சினியர். ஆனால் அவனுக்கு யாரேனும் வழிகாட்டுவார்களா, இன்னும் இருபது ஆண்டுகள் கடந்து அவன் யாராகப் போகிறான் என்றெல்லாம் நினைத்து மட்டும் கொண்டேன். நாம் நம்மைப் பற்றித்தான் நினைத்துக் கொள்கிறோம். பெரும்பாலும். சிலர் இருக்கிறார்கள்,உதவி புரிபவர்கள், எளியவரைக் கைதூக்கி விடுபவர்கள். ஆனால் கொடுப்பவரும் வாங்கி கொள்பவரும் சந்திக்க வேண்டுமே!! இதோ எலியட்ஸ் என்ஜினியரை போஸ்ட் எழுதிவிட்டு மறந்து போகப் போகிறேன். காலை சிற்றுண்டிக்கு இட்லியா தோசையா என்ற பெரும் ஆராய்ச்சிக்குப் போகிறேன். எலியட்ஸ் பீச் ஓரம் எத்தனை எஞ்சினியர்களோ...........................
ரஞ்ஜனி த்யாகு
ஐஸ்க்ரீம் விற்கும் சிறுவன். அவன் அம்மா பஜ்ஜி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறாள். ஐஸ்க்ரீம் வண்டி ஒரு சிறிய fridge போல செயல்பட பாட்டரி மூலம் கரண்ட். அதில் ஏதோ கோளாறு. அந்தப் பையனுக்கு பதைபதைப்பு.நல்ல கூட்ட நேரம். "அம்மா பவர் வரலே,வந்து பாரு",ஒரு முறை பல முறை கூவி அழைக்கிறான்.அம்மாவுக்கோ,திரும்பக் கூட நேரம் இல்லை.ஒயரை எடுத்து என்னமோ செய்கிறான். மாற்றி மாற்றி அங்கே,இங்கே சொருகினான்.தட்டிக் கொட்டி,கருமமே கண்ணாயினார் என்பது போல் பத்து நிமிஷம் சுற்றுப்புற நினைவு மறந்து என்னமோ செய்தான். விளக்கு எரிந்து விட்டது. அவன் முகத்திலும்தான். பள்ளிகளும் கல்லூரிகளும் டிகிரி தருகின்றன. ஆனால் பேப்பரில் உள்ள டிகிரி ஒருவனை பொறியாளனாக்குவதில்லை. ஐஸ்க்ரீம் சிறுவன் டிகிரி இல்லாத உண்மை எஞ்சினியர். ஆனால் அவனுக்கு யாரேனும் வழிகாட்டுவார்களா, இன்னும் இருபது ஆண்டுகள் கடந்து அவன் யாராகப் போகிறான் என்றெல்லாம் நினைத்து மட்டும் கொண்டேன். நாம் நம்மைப் பற்றித்தான் நினைத்துக் கொள்கிறோம். பெரும்பாலும். சிலர் இருக்கிறார்கள்,உதவி புரிபவர்கள், எளியவரைக் கைதூக்கி விடுபவர்கள். ஆனால் கொடுப்பவரும் வாங்கி கொள்பவரும் சந்திக்க வேண்டுமே!! இதோ எலியட்ஸ் என்ஜினியரை போஸ்ட் எழுதிவிட்டு மறந்து போகப் போகிறேன். காலை சிற்றுண்டிக்கு இட்லியா தோசையா என்ற பெரும் ஆராய்ச்சிக்குப் போகிறேன். எலியட்ஸ் பீச் ஓரம் எத்தனை எஞ்சினியர்களோ...........................
ரஞ்ஜனி த்யாகு
MOTHER PROTECTS
Best Online Forex Brokers provide traders with access to global currency markets through secure, user-friendly, and feature-rich trading platforms. Leading forex brokers offer competitive spreads, fast trade execution, advanced charting tools, multiple account types, and reliable customer support to enhance the trading experience. Whether you are a beginner seeking educational resources or a professional trader looking for advanced analytics and low-cost trading, choosing the right online forex broker can significantly impact your success. A trusted broker ensures transparency, security, and the tools needed to navigate the dynamic forex market with confidence.
பதிலளிநீக்கு