சனி, 12 செப்டம்பர், 2015

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் இடையூறின்றி இனிது முடிய எல்லோரும் பிரார்த்திக்கும் முழுமுதற் கடவுள் பிள்ளையார்.நாம் இந்த அவசர யுகத்தில் வணங்கிச் செல்லும் விதத்தில் எளிமையாகக் கோவில் கொண்ட ஒரே தெய்வம் அவர்.எந்த வழி சென்றாலும் கூப்பிடு தூரத்தில் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது தமிழகத்தின் தனிச் சிறப்பு.ஆனை  முகத்தோன் அம்பிகையின் திருமேனி மஞ்சளில் இருந்து தோன்றியவர்.அன்னைக்குக் காவல் இருந்து அப்பனை எதிர்த்து அதன் பலனாக சிரம் இழந்து மீண்டும் தந்தையின் கரத்தால் வேழமுகம் பெற்றவர்.கணங்களின் தலைவனாய் விளங்குவதால் கணநாதர்.செல்வமும் ஞானமும் நல்குபவர்.சரி,ஞானம் என்றால் என்ன?அறிவியலை விஞ்ஞானம் என்கிறோம்.ஆன்மிக அனுபவத்தை மெய்ஞானம் என்கிறோம்.இரண்டிற்கும் என்ன தொடர்பு?அல்லது என்ன வித்தியாசம்?அது பற்றிய சிறு விவாதம்தான் இன்னும் சில மணித்துளிகள் நாம் செய்யப் போவது.இது சற்றே பெரியதொரு topic .ஓரளவு அனுபவம் பெற்று ,தகுதியும் பெற்றால்தான் விளக்கவும் விளங்கிக் கொள்ளவும் முடியும்.நான் கூறப் போகும் விஷயங்கள் புத்தகங்கள்,internet ல் இருந்து சேகரித்த தகவல்கள்தான்.பெரியவர்கள் கருத்துப் பிழைகள் ஏதேனும் கண்டு பிடித்தால் முடிவில் தெரிவித்தால் திருத்திக் கொள்வேன்.

இந்து சமயம் எப்போது உருவானது?அதற்கு செப்டம்பர் 17ம் தேதி என்பது போல நாள் சொல்ல முடியாது.மகான்கள் கடவுளை நோக்கி நடந்த பாதையை அடிப்படையாய்க் கொண்டு உருவானதே அது.சமய உண்மைகள் ஆழம் நிறைந்தவை.இப்போது எதை எடுத்தாலும் விஞ்ஞானப் படி அது சரியா என ஆராய்கிறோம்.ஆனால் அந்த விஞ்ஞானமே சரியா?எது சரி எது தவறு?ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று சரி.உதாரணத்திற்கு ஒரு விஷயம் எடுத்துக் கொள்வோம்.மருத்துவர்கள் ஒரு மருந்து கண்டுபிடிக்கிறார்கள்.சில காலம் பழக்கத்தில் இருந்த பின் அவர்களே அதன் sideeffects மிகவும் தீவிரமாக உள்ளதாய்க் கூறி அதை ban செய்து விடுகிறார்கள்.விஞ்ஞானம் அறிவு பூர்வமானது.ஆனால் ஒரு கண்டுபிடிப்பைத் தவறாக்கி மற்றொன்று அந்த இடத்தை ஆக்ரமிக்கும் போது விஞ்ஞானம் குருடாகிப் போகிறது.விஞ்ஞானி முட்டாளல்ல.ஆனால் பல நேரம் விஞ்ஞானம் என்ற பெயரால் மதத்தைக் கொச்சைப் படுத்துவது தவறு.மூட நம்பிக்கைகள் வைத்துக் கொள்வது அதனினும் தவறு.சமயம் விஞ்ஞானத்தை உள்ளடக்கியது.ஒரு கோவிலின் அமைப்பையே எடுத்துக் கொண்டால் ஆகம விதிகளின் படி கட்டப் பட்ட ஆலயங்களில் விஞ்ஞானத்தின் பங்கு என்ன என்று அறிந்து கொள்ளலாம்.

நம் உடல் ஒரு ஆலயம்.வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும் சேர்ந்த ரத்தம் உடல் முழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.செம்மண்ணும் சுண்ணாம்பும் பூசப் பட்ட மதில் சுவர் கொண்ட ஆலயத்தில் கர்பக்ருஹத்தில் கடவுள் வீற்றிருக்கிறார்.கர்ப க்ருஹத்தின் மேல் உள்ள பகுதியை விமானம் என்கிறோம்.crane எல்லாம் இல்லாத காலத்தில்,விமானத்தின் மேல் வைக்கப் பட்ட கல் சாரம் கட்டி மேலே ஏற்றப் பட்டது.கோவில் தூண்கள் எப்படி நின்றன?சிமெண்ட் இல்லை என்றால் எது இணைப்புக்குப் பயன் படுத்தப் பட்டது?அன்றும் விஞ்ஞானமும் கணக்கும் உண்டு.மூதாதையர்கள் முட்டாள்கள் அல்லர்.சமூக சிந்தனையுடனும் கோவில்கள் கட்டப் பட்டன.உயரமான கோபுரங்கள் ஊர் நன்மை கருதி வடிவமைக்கப் பட்டவையே.பொருள்கள் கோபுரங்களில் வைத்துப் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன.வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போது மக்களையும் பொருள்களையும் பாதுகாக்க உயர்ந்த கோபுரங்கள் உதவின.

ஒரு சூப்பர் மார்கெட்டில் பொருள் அடுக்குவது போல் இஷ்டப் படி ஆலயம் எழுப்ப இயலாது.அந்தக் கட்டமைப்பிற்கு பொருள் உண்டு.கர்பக்ருஹம் நம் கபாலம் போல.அங்கு இறைவன் ஆற்றல் உள்ளது.கோவில் கொடிமரம் முதுகுத் தண்டு போல.கீழே உயிராற்றலின் ஆக்க சக்தி குண்டலினி சுருண்டு படுத்துள்ளது.குண்டலினி அங்குள்ள வரை உலக சிந்தனைகளே இருக்கும்.அதைக் கபாலத்திற்குக் கொண்டு வர வேண்டும்.சரீரத்தைக் கடந்து நிற்றல் வேண்டும்.ஜீவன் சிவனாக வேண்டும்.அதைத்தான் கொடிமரம் கடந்து சென்று கர்பக்ருஹத்தில் உள்ள இறைவனைத் தரிசிப்பதற்கு ஒப்பிடுகிறோம்.திருஅண்ணா மலையில் கிரிவலம் செய்வோர் ஒரு ஆன்மிக அனுபவம் அடைகிறார்கள்.கிரிவலப் பாதை முழுவதும் மூலிகை மரங்கள்.அந்தக் காற்றை சுவாசிப்பதில் உள்ள நன்மை கருதி கிரிவலம் செய்வோரும் உண்டு.சமய நம்பிக்கைகளும் விஞ்ஞானமும் ஒன்றை ஒன்று compliment செய்து கொள்ளும் தருணங்கள் இது போல் பல உண்டு.பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுகிறோம்.அருள் வேண்டி.தலையில் நெற்றிப்பொட்டில் இரண்டு பக்கமும் குட்டிக் கொள்வதை science super brain yoga என்றழைக்கிறது.சூரிய நமஸ்காரம் தரும் பலன்களுக்கும் விஞ்ஞானிகளும் சமயவாதிகளும் கூறும் விளக்கங்கள் வேறே தவிர அது எத்துணை நன்மை பயப்பது என்ற கருத்தில் மாறுபாடில்லை.

விஞ்ஞானிகள் மெய்ஞானிகளின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் விஞ்ஞானிகளுக்கு ஒரு விஞ்ஞான உண்மை உதயமாவதோ மெய்ஞானிகளுக்கு கடவுள் பற்றிய பேருண்மை உணர முடிவதோ அவர்கள் தன்னை இழந்த கணத்தில்தான் நடக்கிறது.அறிவியல் அறிந்த எல்லோரும் ஆர்கிமெடிசை அறிவார்கள்.ஆர்கிமெடிஸ் என்ன கண்டு பிடித்தார்?ஒரு பொருள் ஒரு திரவத்தில் மிதக்க வேண்டும் என்றால் அதன் எடை அதனால் வெளியேற்றப் படும் திரவத்தின் எடைக்குச் சமமாக இருத்தல் வேண்டும்.இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் நவீனக்  கப்பல்கள் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும்.ஒரு நாள் குளித்துக் கொண்டிருந்த போதுதான்  ஆர்கிமேடிசுக்கு இந்த அறிவியல் உண்மை உரைத்தது.உடனே அவர் யுரேகா யுரேகா என்று கத்திக் கொண்டு குளியலறையை விட்டு  வெளியே ஓடி வருகிறார். உடம்பில் ஒட்டுத் துணி இல்லை.தன்  பற்றிய பிரக்ஞை அற்றவர்கள்தான் துணி இல்லாமல் வெளியே வருவார்கள் அல்லவா?பிரக்ஞை அற்ற நிலையில்தான் அவருக்கு ஒரு அறிவியல் தத்துவம் உதித்தது.மெய்ஞானிகள் நிலையும் அதுவே என்பது சொல்லி விளங்க வைக்க வேண்டியதில்லை.அவர்கள்" தான் என்ற பிரக்ஞையை விட்ட போதுதான் பேருண்மைமையாம் கடவுளை அறிகிறார்கள்.விஞ்ஞானமும் மெய்ஞானமும் சந்திக்கும் புள்ளி அதுவே.   "விஞ்ஞானம் உண்மை என்றால் மெய்ஞானம் பேருண்மை.கோவிலில்பயன்படுத்தப் படும் பூக்கள்,நெய் விளக்கு,சந்தனம்,பன்னீர் ,பத்திப் புகை எல்லாம் ஒரு positive energy தரும் பொருள்கள்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

வேதகால ரிஷிகள் மூன்று விதமான அக்னி பற்றி அறிவார்கள்.ஒன்று ordinary fire -ஜடஅக்னி ,இரண்டாவது electric fire-மின்சாரம் ,மூன்றாவது solar fire .நவீன விஞ்ஞானம் முதல் இரண்டு அக்னியையே அறிந்திருந்தது.The fact that an atom is like a solar system could lead them to the 3rd discovery.அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்என்று சொல்லப் பட்டிருக்கிறது.அணுசக்தி பற்றிய அறிவு ஆதிகாலம் தொட்டே இருந்துள்ளது.கணித மேதை ராமானுஜன் கூறுகிறார்,"An equation for me has no meaning unless it expresses a thought of God." ஆழ்மனதில் மெய்ஞாநிகளாய்  இருப்பவர்களே விஞ்ஞானியாகப் பரிணமிக்கிறார்கள்.உண்மையான மெய்ஞாநிகளுக்குப் புலப்படாத விஞ்ஞான உண்மைகள் இல்லை.

பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் விஞ்ஞானத்துடன் கொண்ட தொடர்பை ஒரு முறை நினைவு கூர்ந்து விட்டு உரையை முடித்துக் கொள்ளலாம்.மத்ஸ்யாவதாரம்.மீன்.கடல் வாழ் உயிரினம்.கூர்மாவதாரம் ஆமை.நீரிலும்,நிலத்திலும் வாழ முடிந்த உயிரினம்.வராஹ அவதாரம் Complete transition from water to land.நரசிம்ஹ ம்.பரிணாம வளர்ச்சியில் அடுத்த,பெரிய வளர்ச்சி.வாமன அவதாரம்.முழுமையாக evolve ஆகாத குள்ள மனிதன்.பரசுராமர்.காட்டில் வசித்த,ஆயுதங்களைக் கையாளும் திறமை பெற்ற மனிதன்.ஸ்ரீ ராமாவதாரம்.பல கலைகளில் தேர்ச்சி பெற்ற சமூக வாழ்வின் முக்கியத்துவத்தைக் காட்டின அவதாரம்.இன்னும் கறைபடாத மனிதனை,வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை பெற்ற மனிதனைக் காட்டிய அவதாரம்.ஸ்ரீ க்ருஷ்ணாவதாரமாம் பூர்ணாவதாரம்.அரசியல் வாழ்வின் தன்மையை உலகிற்கு உணர்த்திய ,குழப்பங்கள்,பேராசை நிறைந்த மனிதர்கள் படும் பாட்டை உணர்த்தி,அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டிய அவதாரம்.அடுத்து புத்தர்.உள்  நோக்கிய பயணம் மேற்கொண்டு இன்னும் உயர் நிலைக்குச் சென்ற மனிதனைக் காட்டின அவதாரம்.கடைசியாகக் கல்கி.Destruction.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையே.பிரித்துப் பார்க்க இயலாதவை.இது போன்றதொரு இன்னுமோர் இனிய நாளில் மேலும் பேசுவோம்.கடல் மணலை எண்ணுவது போல ஒரு பிரயர்த்தனமாகவே அது அமையும்.I thank you all very much for your patient listening.

MOTHER PROTECTS


செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஐந்தாவது சக்கரம்



Being a fifth wheel to the coach என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.சில முறை அல்லது பல முறைகள் அப்படி உணர்ந்தும் இருக்கலாம்.நான்கு சக்கரங்களில் ஓடும் ஒரு வண்டிக்கு ஐந்தாவது சக்கரத்தால் எப்படிப் பலன் இல்லையோ அது போல ஒரு இடத்தில் ஒரு பொருளின் அல்லது ஒரு மனிதரின் தேவை இல்லாத போது அப்பொருள் அல்லது மனிதரை ஐந்தாவது சக்கரம் என அழைக்கிறோம்.ஆனால் ஐந்தாவது சக்கரம் உணர்ச்சி அற்றது.ஐந்தாவது சக்கரம் போல் நடத்தப் படும் மனிதன் ஜீவன் உள்ளவன்.சமீப நாட்களில் எனக்கு மிகவும் நெருங்கிய சிலர் தாம் வாழ்வில் ஒரு ஸ்டெப்னி போல, உயிரற்ற பொருள் போல் நடத்தப் படுவதாய் வருந்தியது என்னை மிகவும் சங்கடப் படுத்தியது.யோசிக்கவும் வைத்தது.

அது போல் வருந்தும் எல்லோருக்கும் ஒன்று கூற விரும்புகிறேன்.மற்றவர் நம்மை அப்படி நடத்துகிறார்களா அல்லது அது  நம் மனப் பிரமையா என்ற ஆராய்ச்சிகளைப் புறம் தள்ளுங்கள்.நம் விருப்பம் அற்று நம்மை யாரும் அப்படி நடத்துவது சாத்தியம் இல்லை.ஐந்தாவது சக்கரமாய் உணராமல் இருப்பதில்தான் சூட்சுமம் உள்ளது.  இயல்பாய் வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.அனாவசியக் கவலைகளும்,  நமக்கு அவசியம் அற்ற எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அற்று இருப்போம்.ஒரு பயணத்தில் திடீரென ஒரு டயர் பழுது பட்டால் ஐந்தாவது சக்கரம் இல்லாது போனால் என்ன ஆகும்?திண்டாடிப் போவோம்.வாழ்க்கைப் பயணமும் அது போலத்தான்.

எல்லா நிகழ்சிகளையும் பல விதமாக நோக்கலாம்.எதிர்மறையாக நோக்குவது நம்மை வருத்தும். "நான் யாருக்காகவும் எப்போதும் உதவத் தயாராக உள்ள ஐந்தாம் சக்கரம்.நான் இல்லாது போனால் என் சுற்றமும் நட்பும் திண்டாடிப் போகும்"  என்று மாற்றி யோசித்துப் பாருங்கள். கார் டிக்கியில் கம்மென்று கிடக்கும் ஸ்டெப்னி பல பயணங்களில் சும்மாதான் இருக்கிறது.ஆனால் தேவை வந்து விட்டால் அதனால் அல்லவோ பயணம் நல்ல விதமாய் முற்றுப் பெறுகிறது?சிறு வட்டத்திற்குள் இருந்து வருந்துவதல்ல வாழ்க்கை.தீதும் நன்றும் பிறர் தர வாரா.நான் யாருக்கும் தேவை அற்றவள் எனத் தயவு செய்து நினைத்துக் கொள்ளாதீர்கள் என் அன்பு சினேகிதிகளே.தேவை இல்லாமல் ஒரு புழுவைக்  கூட இறைவன் படைக்கவில்லை.பயனற்ற வாழ்வு,அர்த்தமற்ற வாழ்வு என்றும் ஏதும் இல்லை.

ரஞ்ஜனி த்யாகு

Appeared in September 2015 issue -Manjula Ramesh's snehidhi

MOTHER PROTECTS

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ஆன்மீக நாட்டமும் சமூக அக்கறையும் ------- ​ எங்கே குழப்பம்?

Spiritual என்ற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ்ப் பதம் ஆன்மிகம் என்று கொள்ளலாமா?சமயம் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் பேச முற்படுவது குருமஹராஜ் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறினது போல் உப்பு பொம்மை கடல் ஆழம் காணச் செய்த முயற்சியே.நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது.இயற்கைச் சூழலில் மனம் ஒன்று பட்டு இருந்த அனுபவத்தை நண்பர் ஒருவர் வர்ணித்து இருந்தார்.பறவைகளும் விலங்குகளும் தத்தம் வேலையைப் பார்த்துக் கொண்டு ஆனந்தமாய் சுதந்திரமாய் இருப்பதாகவும் நாம் அதாவது மனித இனம் அவ்வாறு இல்லை என்பதே அந்த எழுத்தில் தொனித்த செய்தி.மேலும் சுற்றுப் புறம் வளமாக இருக்க எல்லா உயிரினமும் அளிக்கும் பங்கும் அதிகம் மனிதன் அதே சுற்றுச் சூழலை மாசு படுத்தச் செய்யும் பங்களிப்பும் அதிகம் என்பதெல்லாம் அவர் வாதம்.இது ஒரு செய்தியாக மட்டும் இருந்திருந்தால் படித்து விட்டு விட்டிருப்பேன்.ஆனால் ஆன்மீக நாட்டம் என்ற சொல் குறுக்கிட்டதே இதை எழுதத் தூண்டியது.

விதி வலிமையானது.கடவுளிடம் கொள்ளும் இடையறா சிந்தனை விதியின் வலிமையைக் குறைக்கும் ஆனால் முழுதும் மாற்றாது. நான் சொல்வது சில்லரையான விஷயங்களை விதி என்ற சொல்லில் அடக்குவதல்ல.நம் பிறப்பு,சூழ் நிலைகள் ,தானாக ஏற்படும் உறவுகள் போன்ற பொதுவான விஷயங்களை மட்டுமே.ஏன் இந்த நாட்டில்,இந்தப் பெற்றோருக்கு,ஏழையாக அல்லது பணக் காரனாகப் பிறக்கிறோம் ஏன் சிலருக்குப்  பிறப்பு முதலே உள்நோக்கும் பாவம் வருகிறது பிறர் ஏன் superficial ஆகவே வாழ்வை வாழ்கிறார்கள் என்பதெல்லாம் நம்மால் அறிய முடியாதவைதானே?அது மட்டுமல்ல.ஒவ்வொரு நிகழ்வுமே நமக்கு மேற்பட்ட சக்தியால் நடக்கிறது என்பதே ஆன்மீகவாதிகளின் கோட்பாடு.மதி விதியை வெல்லுமானால் சமயத்தில் அதை அருள்பவனும் இறைவனே என்றுதான் ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவர்களால் நினைக்க இயலும்.

சமூக அக்கறை தேவைதான்.நம்மை முதலில் மாற்றிக் கொள்வதுதான் செய்ய முடிந்த சுலபமான செயல்.பின் மற்றவரை influence செய்ய முயலலாம்.ஆனால் அதை எந்த அளவு கொண்டு செல்ல முடியும் என்பது நம் கையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.அதற்காக உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் எல்லாம் தேவை இல்லை என வாதம் புரியவில்லை.அவரவர்க்கு ஒரு கடமை உள்ளது.சிலர் உலகில் பெரும் மாற்றங்கள் கொண்டு வருகிறார்கள் என்றால் அவர்கள் அந்த mission உடன் உலகிற்கு வந்துள்ளார்கள் என்று பொருள்.ஸ்வாமி அரவிந்தர் அனைத்தயும் அன்னையிடம் ஒப்படைத்து விட்டு வெகு சீக்கிரமே பொது வாழ்வில் இருந்து விலகி விட்டார்.குரு மஹராஜ் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அவதாரம் சொல்லும் செய்தி வேறு.ஸ்வாமிஜி விவேகானந்தர் அவதாரம் சொல்லும் செய்தி வேறு.அதே போல் சமூக அக்கறை வேறு .உலகம் ஒழுங்காக இல்லையோ என்ற கவலை வேறு.

Rhythm தவறாமல்தான் உலகில் அனைத்தும் நடக்கின்றன.ஆனால் தவறான மனிதர்களும் உலகில்  உள்ளார்கள்.திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல வெளியில் இருந்து யார் என்ன சொன்னாலும் அந்தந்த மனிதன் மனதில் ஒரு பல்ப் எரிய வேண்டும்.அப்போதுதான் நல்லது நடக்கும். அதற்கு அவன் கர்ம வினையே காரணம்.பறவை போல் சுதந்திரமாய் இருக்க ஏன் மனிதனால் இயலவில்லை என்றும் நண்பர் கேள்வி எழுப்பி உள்ளார்.பறவையாவது சிந்திப்பதில்லை.மனிதன் சிந்திக்க முடிந்தவன்.ஒரு சூழ்நிலைக்கு நாம் அடிமை என்ற எண்ணம் நம்மை அடிமையாக்குகிறது.அதே சூழ்நிலைக்கு நாம் எஜமான் என நினைத்தால் நாம்தான் Boss .எண்ணங்கள்தான் காரணம்.

எளிய விஷயங்கள் ஒரு பிரமிப்பு ஏற்படுத்துவதையும் உண்மையில் பிரமிக்கத் தக்க விஷயங்கள் குடத்துள் இட்ட விளக்கு போல் அமைதியாய் இருப்பதையும் பல முறை வாழ்வு நமக்குக் காட்டி இருக்கும்.நம் மனம் மொழி செயல்கள் ஒன்று பட்டு Let us just live .நாம் மற்றவர்களை விட எந்த விதத்திலும் நம்மை உயர்வாக நினைப்பது ஒரு அறியாமையே.மிக அதிக உயரத்தைத்  தொடும் போதுதான் மனித மனதின் சாதாரண ஆசா பாசங்களைக் கடந்த போதுதான் நம்மை சுதந்திரமானவன் என்று நினைத்தாவது கொள்ளலாம்.சாதாரண சமூக விதிகளின் படி மிகவும் நேர்மையாளராக,reasonable ஆக இருப்பவர்கள் நம்மை அறிவு ஜீவிகள் என எண்ணிக் கொள்கிறோம்.நம் அதீத அறிவு என்று நாம் எண்ணுவது ஒரு மாயையே.எண்ணங்களின் சங்கமம் debate என்றுஅறியப் படுகிறது.அதில் பெரும்பாலும் ஒரு பகுதியே உண்மையாக உள்ளது.வாதம் புரிவதில் வல்லவர்கள் இது போன்ற கருத்துப் பரிமாற்றங்களில் வெற்றி காணலாம்.அந்த வெற்றியால் நாம் சொன்னது சரி என எண்ணியும் கொள்ளலாம்.ஆனால் மற்றவர் சொன்னது உண்மைக்கு நெருங்கினதாக இருக்கும் பட்சத்தில் அதை யோசிக்கும் வாய்ப்பைக் கூட இழந்து விடுகிறோம்.அறியாமை நிறைந்த,எதிர்பாராதவை எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புகள் உள்ள இந்த உலகில்  ஒரு துளி உண்மை wisdom இறைவனால் அருளப் பட்டால் அது ஒரு சமுத்திரத்திற்குச் சமம்.
ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS

புதன், 29 ஜூலை, 2015

சந்திப்புகள்-ரயில் பயணங்கள்-நிஜங்கள்

ப்ரயத்தனம் எடுத்துக் கொண்டு நிகழும் சந்திப்பு ஒரு வகை.தானாக நிகழ்வது இரண்டாவது வகை. ப்ரயத்தனப் பட்டு ஏற்படுத்திக் கொள்ளும் சந்திப்புகளில் நாம் கவனமாக இருக்க முடியும்.சந்திப்பு சந்தோஷமாக முடியலாம்.சங்கடங்களிலும் கொண்டு விடலாம்.,நாம் கவனமாகத் தேர்ந்தெடுத்த பின்னும்.ஆனால் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டு சொல்வது போல் அதில் யார் குற்றமும் இல்லை.தானாக நிகழும் சந்திப்புகள் நீண்ட காலம் தொடரும் நட்பாவதும் நடக்கலாம்.சென்ற போஸ்ட்டிற்கு பதில் அளித்த நண்பர் ஒருவர் நம்பிக்கை என்பது என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார்."எது நம்பிக்கை ,கடவுள் உள்ளார் என்பதா இல்லை என்பதா ,குழந்தைகளுக்கு மனதில் நம்பிக்கை உணர்வை எவ்விதம் தூண்டுவது,அறிவியலும் தத்துவமும் நம்பிக்கை பற்றி விளக்க முடியுமா "என்று கேட்டுள்ளார்.அந்தக் கேள்விகளும் நேற்று நிகழ்ந்த சந்திப்புமே இந்த போஸ்ட்டிற்கு துவக்கம்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு நபரை சந்திப்பது வேறு யாரையோ பார்ப்பது போல்தான் என்று தோன்றுகிறது.வெளித்தோற்றத்தைப் புறம் தள்ளி விடுவோம்."நீ துளியும் மாறவில்லை" என்பது பொய் போலத்தான் என் மனம் நினைக்கிறது.போகும் ஒவ்வொரு ஆண்டுடனும் வயதும் போகும் போது அதெப்படி மாற்றம் நிகழவில்லை என்று கதை சொல்லலாம்?ஐந்து வயதில் இருந்த நானும் நீங்களும் இறந்து விட்டதுதானே நிஜம்?சில நாட்கள் முன்னம் நானும் இந்தப் பொய்யை உண்மை என நம்பிக் கொண்டுதான் இருந்தேன்.உடனே நம் மனது மாற்றம் என்பதைக் கெட்ட மாற்றம் எனப் பொருள் படுத்தி யோசிக்கக் கூடாது.It may be change for the better.நட்பும் நம்பிக்கையும் தொடர்புடையவவை.கொஞ்சம் நம்பிக்கை பற்றிப்பேசி விட்டு இரண்டையும் தொடர்பு படுத்தலாம்.

நம்பிக்கைக்கு definition கொடுக்க இயலாது.எது அன்றி வாழ்க்கை இல்லையோ அது நம்பிக்கை.அதைக் கடவுள் மேல் வைக்கலாம்,தன் மேலே வைத்துக் கொள்ளலாம்,தான் சார்ந்துள்ள தன்னைச் சார்ந்துள்ள பேர் மேல் வைக்கலாம்.அது ஒரு பற்றுக் கோடு . நம்பினோர்க்கு அவர் சாமி.நம்பாதவர்களுக்குக் கல்.Philosophical ஆக sound பண்ணாமல் faith பற்றி விளக்கம் கூற முற்பட்டால் நான் தோல்வியே அடைவேன்.இறையிடம் கொள்ளும்,தன்னிடமே கொள்ளும் நம்பிக்கை தவிர வேறு எதன் மீது வைக்கும் நம்பிக்கையும் ஒரு நாள் இல்லையேல் ஒரு நாள் மனம் புண் படுவதில்தான் முடியும். நேர விரயம் தவிர வேறில்லை.

மௌனம் ஒரு மொழி.உயர்ந்த மொழியும் கூட.உரையாடலில் இருவர் பங்கு உள்ளதால் ஒத்த எண்ணங்கள் அற்ற போது அது நிஜ அர்த்தத்தை இழந்து அனர்த்தமாகி விடுகிறது.அக்னிக்குக் கொடுக்கப் படும் பொருள்களை அது வேக வேகமாய் விழுங்குவது போல் மொபைல் போனை சார்ஜ் செய்ய இணைத்தால் அது அதி வேகமாய் சார்ஜ் ஆவது போல் பேசப் பேச விஷயங்கள் பல பரிமாணங்களில் வளர்கின்றன.ரயில் பயணங்களில் நிகழ்வது போன்ற சந்திப்புகளில் எதிர்பார்ப்பும் இல்லை.ஏமாற்றமும் இல்லை.எல்லா சந்திப்புகளையும் ரயில் சந்திப்பு போன்று எளிமையாக ஆக்கிக் கொள்ளலாமே?வாழ்க்கை ஒரு ரயில் பயணம்தான் அல்லவா?நம் ஸ்டேஷன் வந்தால் இறங்கப் போகிறோம்.நம்முடன் தொடர்பில் உள்ள எல்லாரும் நிஜத்தில் ரயில் சிநேகங்கள் தவிர வேறில்லை.காலம் முன்னும் பின்னும் நீண்டு கிடக்கிறது.சிலர் நம்முடன் ஒன்றாக ஏறி ஒன்றாக இறங்குகிறார்கள்.எவ்வளவு சிநேகமாய் இருப்பினும் சில சமயம் இறங்கும் நேரம் வந்து விடுகிறது,யாரேனும் ஒருவருக்கு.அப்படி இறங்குபவர்களை நம்பிக்கை துரோகி என்று அழைக்கிறோமா?பின் நிஜத்தில் மட்டும் ஏன் அனாவசியமாய் faith என்று பெரிய வார்த்தைகள் கூறி பயணத்தின் இனிமையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

சற்றே வெளி வந்து எட்டிப் பார்த்து சொல்ல நினைத்ததை சொல்லி விட்ட இந்த நத்தை மீண்டும் சொல்லத் தூண்டும் விஷயம் கிடைக்கும் வரை உள்ளே செல்கிறது.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

திங்கள், 27 ஜூலை, 2015

சிவபெருமான் மேல் காதலாகி கசிந்துருகி ஒரு கிரிவலம்

சிவபெருமான் மேல் காதலாகிக் கசிந்துருகுவோர்க்கே கிரிவலம் செய்யும் பாக்கியம் அமைகிறது.உடற்பயிற்சிக்காக,மூலிகைக் காற்றை சுவாசிக்க என்று வேறு காரணங்கள் கற்பித்துக் கொண்டு கிரிவலம் செய்வோரும் அவன் மேல் மனம் கசிந்து போகாமல் இருப்பது சாத்தியமில்லை.நினைத்தாலே முக்தி அருளும் தலமாம் திருவண்ணாமலையில் கால் பதிக்கும் போதே ஒரு அமைதி நம்மைச் சூழ்கிறது.எங்கு திரும்பினும் லிங்க மயம் .லிங்க வடிவம் பற்றி ஒன்று கூற விருப்பம்.பிள்ளையார் வடிவத்திற்கும் லிங்க வடிவிற்கும் மனதை ஒருமுகப் படுத்தும் சக்தி அதிகம் உள்ளதாய் எப்போதும் தோன்றும்.ஒரு ராமர் படத்தையோ லக்ஷ்மி படத்தையோ காலண்டரில் அல்லது வேறு இடங்களில் பார்க்கும் போது என் .டி .ஆரோ நயன்தாராவோ மனதில் சில சமயம் எட்டிப் பார்ப்பதுண்டு.சில பெண்களைப் பார்த்து "அப்படியே மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கிறாய் "என்று பொய் சொல்வோம்.ஏதோ அந்த தெய்வத்தை ஒரு தடவை பார்த்து வந்தார் போல் .வரலக்ஷ்மி விரதம் பூஜை செய்யும் போது சம்பந்தம் அற்று அந்தப் பெண் முகம் மனதில் நிழலாடும்.லிங்க வடிவில் சிவனைத் த்யானிக்க இந்த பிரச்சினை இல்லை.

கிரிவலப் பாதையில் எட்டு லிங்கங்கள் சிறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன.வலம் வருவோர் அநேகமாக எல்லா லிங்கங்களையும் தரிசித்துச் செல்கிறார்கள்.இந்திர  லிங்கம் முதலாவது. ஈசான லிங்கம் கடைசி.அண்ணாமலையார் திருக் கோவில் வாசலில் தொடங்கி அதே இடத்தில் முடிக்க வேண்டும்.14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையின் நீளம்.வேறு விஷயங்களுக்கு வருவோம்.டாகுமென்ட்ரி மாதிரி ஒலிக்கிறது.

நம் மனதிற்குள் ஏற்படும் பதிவுகளை நம் விருப்பப் படி interpret செய்து கொள்ளலாம்.இதில் சொல்ல வருவது அந்த ஐந்தரை மணி நேரம் நான் அடைந்த உணர்வுகள்.கிரிவலம் மேற்கொள்ளும் பாக்கியம் பெற்ற உங்களில் பலர் இன்னும் உயர் நிலையில் இருந்து யோசித்திருக்கலாம்.முதலில் நந்திகேஸ்வரர்.பல நந்திகள் வழி பூர.எல்லாம்,எந்த மூலையில் இருந்தாலும் அண்ணாமலையாரை நோக்கிக் கொண்டிருக்கின்றன.நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதில் அவனை மட்டுமே நினை என்பதைத்தான் அவை உணர்த்தின.கிரிவலத்தை அதி காலை அல்லது அந்தி மங்கும் வேளையில்தான் பொதுவாகத் தொடங்குகிறார்கள்.இல்லையென்றால் very simple .கால் சுடும்.திருவோடு மட்டும் உடைமையாய்க் கொண்ட பக்கிரிகள் பலர்.எல்லோரும் இறையுடன் ஒன்றினவர்களா தெரியாது. ஆனால் வேறு ஓர் உலகம் உள்ளது.அவர்களில் சிலர்  realised  souls ஆக இருக்கலாம்.திருவோடு சுமந்து திரிய வேண்டாம்.But பணம் பண்ண அலையவும் வேண்டாம்.எது வசதி?ஒவ்வொருவருக்கு ஒரு பொருள் .தேவைகள் --அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தியாகாத பேரைக் கொண்ட பூமியில் ஆசைகளுக்கு வரையறை வகுத்துக் கொள்ளவில்லை என்றால் சிவன் நினைவு எப்போ வரும்?

இயற்கையுடன் ஒன்றின நிலை.முழு அமைதி.இயற்கை அன்னை கடவுள்தானே.சுற்றுப்புறம் முழுமையும் பிரபஞ்சம் முழுதும் ஒம்காரத்தால் நிரம்பி உள்ள உணர்வு.பேசத் தோன்றுவதில்லை. சும்மா இரு சொல்லற என்பது எத்துணை உண்மை! இது மாதிரி இன்னொரு ஐந்து மணி நேரம் வாய்க்க இன்னும் எத்தனை நாள் காக்க வைக்கப் போகிறாய் பெருமானே என்று தோன்றாமல் கிரிவலத்தை முடிப்பது சாத்தியம் இல்லை.இடு காட்டின் வழி நடந்துதான் ஈசான லிங்கத்தை அடைகிறோம்.சமரசம் உலாவும் இடமாம் இடுகாடு தாண்டி ஈசான லிங்கத்தை தரிசிக்கும் வினாடி மார்க்கண்டேயன் போல் போய்த் தழுவிக் கொள்ளத் தோன்றுகிறது.மன ஏக்கம் கண்ணீராய் வெளிப் படுகிறது.இந்த உலகமும் உறவுகளும் அந்தஏக்கத்தைப் போக்க முடியுமா என்ன? மேலே எழுத வரவில்லை.மறுபடி பேசலாம்.

ரஞ்ஜனி த்யாகு

MOTHER PROTECTS

வியாழன், 23 ஜூலை, 2015

கண்ணன் வருவான்



நம்முடையது ஒரு கர்ம பூமி.நமக்கென விதிக்கப் பட்ட கர்மத்தை அசராமல் செய்வதே நாம் செய்யக் கூடிய மிக உயர்ந்த செயலாக இருக்க இயலும்.யாராலும் கட்டுப் படுத்த இயலாத மனிதன் சுதந்திரமானவன்.சென்ற மாதம் திருவண்ணாமலை கிரிவலம் சென்றோம்.இயன்றால் ஒரு முறை சென்று வருவது ஒரு புத்துணர்வூட்டும் அனுபவமாய் அமையும் இயற்கையை ரசிக்கும் அனைவருக்கும்... சுதந்திரம் என்பது என்ன மாதிரியானதொரு அனுபவம் எனத் தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கும்.மனம் சென்ற திசையில் பயணிப்பதல்ல சுதந்திரம். எல்லாம் கழன்று மனம் அடங்கிய நிலை அது.

இந்த போஸ்ட் எழுதத் தொடங்கிய மனநிலை வேறு.சில சமயம் தொடர்ந்து எழுத இயலாது ஏதோ குறுக்கிட்டு விடுகிறது.எல்லாவற்றில் இருந்தும் விடுபட்டு நிச்சலனமாக இருக்க விரும்புவோர் மற்றவர் அப்படி இருப்பதையும் ரொம்ப மதிக்கவே செய்கிறார்கள்.ஆனால் அதை வெளிப் படுத்தக் கூடச் செய்யாது இருப்பதே நன்று என்று இன்று புரிந்தது.Familiarity breeds contempt என்பது உண்மைதான்.மிகவும் பழகிய ஒரு நபரிடம் ,'நாம் ஒருவரை ஒருவர் அனாவசியமாகப் பிணைத்துக் கொள்ள வேண்டாம்.எப்போது இயல்பாகப் பேச வேணும் என்று தோன்றுகிறதோ அப்போது வாய் மொழியாகவும் மற்ற நேரம் டெலிபதியாகவும் பேசுவோம்' என்ற பொருள் பட சில வார்த்தைகள் கூறி விட்டேன். ஆத்மார்த்தமாக,அப்பாவியாக ஏதேனும் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுதான் நடந்தது.யாரையும் பிணைக்க விரும்பாத யாராலும் பிணைக்கப் படவும் விரும்பாத நிலைக்கு வந்து விட்டிருந்தால் இதைப் படிக்கும் உங்களுக்கு என் மன ஓட்டம் புரியும்.

நாம்தான் வம்புகளை விலை கொடுத்து வாங்குகிறோம்.நம் அமைதியைக் கெடுத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுகிறோம்.விதிக்கப் பட்ட கர்மத்தை செய்தால் போதும்.மற்றதெல்லாம் தானே நடக்கட்டும்.நாமே தேடிச் சென்று அடையும் இலக்குகளை விட இறைவன் வழி நடத்துவதால் சென்றடையும் இலக்குகளே சரியாய் அமைகின்றன.திரௌபதி துகிலுரியப் பட்ட போது புடவையைக் கையால் பிடித்து கொண்டிருந்த வரை வராத கண்ணன் இரண்டு கையையும் அவள் மேலே தூக்கியவுடன் ஓடி வந்தானல்லவா?நாமும் எல்லாம் கண்ணனாலே என்று நினைத்துக் கொள்வோம்.எல்லோருக்காகவும் கண்ணன் வருவான்.அமைதியும் அருள்வான்.

ரஞ்ஜனி த்யாகு


MOTHER PROTECTS

செவ்வாய், 7 ஜூலை, 2015

சொல்ல மறந்த கதைகள்

எல்லோர் வாழ்க்கையிலும் சொல்ல மறந்த கதைகள் உண்டு .சிலர் இது போன்ற பைசா பிரயோஜனம் இல்லாத ஆராய்ச்சிகள் செய்யாது நிம்மதியாக இருப்பது உண்டு.சிலரால் அது முடியாது.முடியாதென்றால் முடியவே முடியாது என்று பொருள்.அவர்கள் மனம் சிறு வயது முதல் ஆசையாகச் சேகரித்த பல சிறு கதைகளால் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது.அதைக் கேட்க ஆள் வேண்டும் அல்லவா?இந்த அவசர யுகத்தில் யாருக்கு அதற்கு நேரம் உள்ளது,சொல்லுங்கள்!அவர்கள் மன எழுச்சியின் வெளிப்பாடுகளே டயரிகள்,blogs ,ஓயாத பேச்சுகள்.

கதை கேட்க எல்லோருக்கும் பிடிக்கும்.ஆனால் அது அவர்கள் மனதுக்கு நெருங்கினதாய் இருக்க வேண்டும்.தன்னை கதையின் ஏதோ ஒரு நிகழ்வுடன் identify பண்ணிக் கொள்வது முடியும் எனில் அந்தக் கதை பிடிக்கிறது.நேற்று 30 வருஷங்களாய்த் தேடின ஒரு நட்பை முகநூலில் பிடித்தேன்.பி.எஸ்.ஜி.கல்லூரியின் ஒவ்வொரு மரமும், கணினி அறிமுகமாகிக் கொண்டிருந்த நாட்களில் பிரம்மாண்ட கணினி முன் அவள் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ,சம்பந்தமே இல்லாத கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்டில் போய் சிவனே என்று காத்திருந்ததும்  இப்போது போல் அன்றி ஆண்களே அதிகம் இருந்த கல்லூரியில் ஒரு வித மிரட்சியுடன் ஆனால் சீனியருடன் போகிறேன் என்று ஒரு பாதுகாப்பு உணர்வுடன் கல்லூரி கேண்டீனில் குடித்த  காபியும் கோயம்புத்தூரின் விசாலமான சாலைகளும் அன்னபூர்ணா கௌரிசங்கரும் அமைதியான ஞாயிறு காலைப் பொழுதுகளில் ஒரு தூக்கப் போர்வை போர்த்திக் கொண்டு விடியும் பெண்கள் விடுதியும் அவ்வப்போது ஞாபகங்களில் தலை நீட்டிப் போவதுண்டு.

சிறிய வயதில் ,ஏன் வயதானாலும் கூட பலருக்கு மாறாதது மாற்றம் என்ற புரிதல் வருவதில்லை.இளமைக் காலங்களில் நம் வாழ்வு ஓடிய ஊர்களுக்கு இப்போது போனால் எவ்வளவு அந்நியமாய் உணர்கிறேன் தெரியுமா?எல்லாம் மாறிப் போயுள்ளது.நாம் வாழ்ந்த தாத்தா கட்டிய வீடும் படித்த பள்ளியும் விளையாடின வீதிகளும் காலால் நடந்தே தேய்த்த சாலைகளும் "ஓ ,அது நானல்ல அதையா இங்கு தேடுகிறாய் "என்று எகத்தாளமாய்க் கேள்வி கேட்கின்றன.அது சில சமயங்களில் ஒரு சிறு வலி உண்டாக்கும்.இடங்கள் நம்மை அன்னியமாக உணர வைத்தால் உண்டாகும் வருத்தத்தை விட இனிமையானவர்களாய் இளமையில் நாம் கொண்டாடியவர்கள் நம்மை யாரோ போல் பார்த்தால் உண்டாகும் வருத்தம் அதிகம்.

நேற்று நீண்ட காலமாய்த் தொடர்பில் இல்லாத ஒரு நட்பைத் தொலைபேசியில் அழைக்க நேர்ந்தது."நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று ஆரம்பித்த உடன் ,"என்ன!நீங்களா?என்னை எப்படிக் கூப்பிடுவோம் என்று கூட உனக்கு மறந்து விட்டதா? "என்று மறுமுனை வள்ளென்று விழுந்தது.எப்படி சில பேர் பணம்,பதவி எது வரினும் தம்மை மாற்றிக் கொள்வதில்லை என்ற எண்ணம் சுகமாய் இருந்தது..முகநூலில் முப்பது வருஷம் சென்ற பின் கிடைத்து "Friend request "(!!!!) போட்டு மறுபடி friend ஆன என் தோழி கேட்டாள் ,"What have I done to you,?You still have so many fond memories?" என்னிடம் பதில் இல்லை.நிகழ்கால ஓட்டத்தை தடை செய்யாத,ஆனால் நிதானிக்க உதவும் ஒன்று நல்ல நட்பல்லவா ?வாழ்வின் இரு நிமிடங்கள் ஒன்று போல் இருப்பதில்லை.Somewhat apologetically I told her "I am not as nagging as before.So don't think I will bother you too much". You know what reply I got! "How many of us will have the  privilege of listening to your nagging.I am one among the few lucky ones !"

நினைவிற்குப் பிடித்த கதைகள் இன்னும் பல உண்டு.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS