வியாழன், 14 மே, 2015

எழுத்து



மே மாதத்தின் முதல் எழுத்து.சென்ற வாரம் சற்றே slow ஆகி விட்டேன்.Blog எழுதுகிறேனா எல்லோரையும் வாக்குவாதத்திற்கு அழைத்து அதில் இன்பம் காண்கிறேனா என்று சந்தேகம் வந்து விட்டதே காரணம்.கருத்துப் பரிமாற்றங்கள் பலன் தரும் செயலா ,தெரியவில்லை.பொதுவாக யாரும் சொல்லி நம் எண்ணங்களை மாற்றிக் கொள்ள மனித மனம் விரும்புவதில்லை.இந்த வாழ்க்கையின் goal இதெல்லாவற்றையும் விடப் பெரிய ஏதோ ஒன்று.எப்படிப் பட்ட வாழ்வு வாழ்பவரும் கடைசியில் அடைய வேண்டிய -- விரும்புகிற இலக்கு ஒன்றுள்ளது.அதற்கு நம்மைத் தயார்ப் படுத்துவதாக நாம் புரியும் மற்ற செயல்கள் இருக்கலாமே அன்றி காலம் வெட்டியில் கழிந்து விடக் கூடாது.இது எனக்கு நானே எழுதிக் கொள்ளும் கடிதம் போலத்தான்.Sustained interest ஒரு விஷயத்தில் வைத்துக் கொள்வது எத்துணை சாத்தியம் .?எழுதுவது கூட அப்படித்தான் என்று உணர்கிறேன்.வைரமுத்து மாதிரி,வாலி மாதிரி நினைத்தால் எழுத முடியும் வரம் வாங்கி வருபவர்களுக்கு தினம் சொல்ல ஏதோ செய்தி உள்ளது.ஆனால் சாமானியர்களுக்கு?எழுத வேண்டும் என duty மாதிரி செய்தால் ஒன்றும் எழுத வராது.மேலும் தான் என்ற எண்ணத்தை அவ்வளவு சுலபமாகக் கடக்க முடிவதில்லை. முயற்சிப்பதாய் வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.எனக்கு நானே எழுதிக் கொள்வதாய் சொன்னாலும் யாரேனும் படித்துக் கருத்து சொன்னால் சந்தோஷமாகத்தானே இருக்கிறது?யார் படிக்கப் போகிறார்கள் அப்படியே படித்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற நினைப்பு கொஞ்சம் என்னை நிதானப் படுத்தி விட்டது எனலாம்.(படித்து விட்டு என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒரு சிலர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)

வெளியிலே தெரியும் பெரிதாகப் பேசப்படும் வெற்றிகள் தவிர நம்மை நாமே வெற்றி கொள்ளும் செயல் ஒன்றுண்டு.Aurobindo Mother says" Controlling a desire gives more satisfaction than satisfying it". மேலே குறிப்பிட்டது போல் self love உணவு,உடைகள் மீது உள்ள பற்று ,எல்லாமே மனதின் மூலையில் உள்ள desires தான்.நேற்று வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன்,இப்போதிருப்பதை விடவும் கொஞ்சம் consciousness அதிகம் பெற்று  அடுத்த படிக்கு செல்ல விரும்புவோரின் அடிப்படை தகுதி என்று எதைக் குறிப்பிடலாம்?எனக்குத் தோன்றியது எதற்கும் மனச் சோர்வடையாததொரு நிலை. இது கஷ்டம் போல் தோன்றினாலும் ப்ரயத்தனத்தால் அடையக் கூடியதுதான்.ஆனால் என் தம்பி சொன்ன பதில்தான் சரி போல் தோன்றியது.Avoiding unnecessary communication என்றான்.வார்த்தைகள் குறைய உடல் மொழி நிதானமாகிறது.அது மனத்தையும் கண்டிப்பாய் அமைதியாக்குகிறது.இதெல்லாம் நடந்தால் மனச் சோர்வு தானே மறைகிறது,எனவே நீ சொன்னது நாலாவது step என்றான்.எல்லா வழி communication க்கும் இது பொருந்தும்.மின்னஞ்சல்,குறும் செய்திகள்,வாட்சப் ,முகநூல் எல்லாம்தான்.இந்த வாரம் Hindu Open Page ல் வாட்சப் பற்றி ஒருsenior citizen எழுதியதைப் படிக்கச் சொல்லி நண்பர் கூறினார்.அவ்வளவு எதார்த்தமாக இருந்தது அந்த எழுத்து.ஒரு நாளில் நூற்றுக் கணக்கான ,அதிகம் அறிமுகமற்ற மனிதர்களுக்குக் கூட ஏதேதோ செய்திகள் வாட்சப்பில் அனுப்பிக் கொள்கிறார்கள்.ஆனால் வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் கடிக்காத குறையாய்ப் பேசுகிறோம்.

வாழ்வின் முதல் 10 வருடங்கள் அறியாக் குழந்தைப் பருவத்திலும் அதிக நாள் வாழ்ந்தால் கடைசி காலங்கள் நினைவுகள் மங்கியும் செலவாகிறது.எண்பதுகளில் உள்ள என் பெற்றோருடன் 6 நாள்கள் இருந்து வந்தேன்.I must say it is a spiritual experience.தான் வைத்ததே சட்டம் என்றிருந்த என் அப்பா" நான் இப்போ என்ன செய்ய?குளிக்கவா சாப்பிடவா" என்று கேட்பதும் நடை பழகும் குழந்தையின் தடுமாற்றத்துடன் என் அம்மா நடப்பதும் பார்த்து மனத்தின் ஓசைகள் அடங்கி விட்டதாய் உணர்கிறேன்.நேற்று சந்தித்து வந்த -கீழே விழுந்து முகமெல்லாம் அடி பட்டுக் கொண்டிருந்த ,நண்பரொருவரின் அப்பா.எப்படி வயதானால் ஒவ்வொன்றாய் கழன்று போகிறது?ஆனால் இதையெல்லாம் பார்ப்பது வாழ்க்கையை அணுகும் முறையைக் கற்பிக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன்..There is nothing to get depressed.நேபாளில்,சுனாமி தாக்கிய போது -புஜ் பூகம்பத்தின் போதெல்லாம் எத்தனை மரணங்கள்?அது போன்ற இயற்கைப் பேரழிவுகள் எதிலும் சிக்காமல்,வறுமை போன்ற கொடுமைகள் இல்லாது நம் பெற்றோர் 80 வயதைக் கடந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி.

A mental preparation is needed to face the evening years of life.அது இல்லாது போனால் நமக்கும் கஷ்டம்.நம்மைக் கவனித்துக் கொள்வோருக்கும் கஷ்டம்.வாழ்க்கை எல்லாவற்றையும் balance செய்யத் தெரிந்தவர்களுக்கே .ஒவ்வொரு நிகழ்வையும் உணர்வு பூர்வமாக மட்டும் இல்லாது தள்ளி வைத்துப் பார்ப்பவர்களுக்கே.நாம் active ஆக இருக்க வேண்டிய காலத்தை எல்லாம் கவலைகளில் மூழ்கடித்து விட்டால் வயது முதிர்ந்த பின் வரக் கூடியதல்ல மன அமைதியும் மன முதிர்ச்சியும்.அதைத்தான் பாரதியார் நின்னைச் சரணடைந்தேன் பாடலில் சொல்கிறார்.நாம் கவலைப் படும் பல விஷயங்கள் நடக்காது போகலாம்.நடந்தே தீரும் என்ற விஷயங்கள் நேரும் வரை கவலைகளை ஒதுக்கி வைக்கலாம்.மேயின் முதல் எழுத்தே கடைசியும் ஆகிப் போனது.பேசுவோம்...

ரஞ்ஜனி த்யாகு

Mother Protects

புதன், 13 மே, 2015

எது வெற்றி?

நம் நாட்டில் மருத்துவ வசதிகள் பெருகியதால்,வாழும்  சராசரி வயது உயர்ந்துள்ளது.முக்கியமாக சென்னையில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் உலகத்தரம்  வாய்ந்தவை.ஆனால் சராசரியாய் வாழும் வயதை மட்டும் உயர்த்தி என்ன பலன்? முதியவர்கள் எந்த அளவு கவனித்துக் கொள்ளப் படுகிறார்கள் ,கவனித்துக் கொள்ளா விட்டால் கூடத் தேவலை. துரத்தப் படாமல்  அலட்சியப் படுத்தப் படாமல் இருக்கிறார்களா என்பதே நம் முன் உள்ள கேள்வி.நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்த்தால்தான் தெரியும்.ஒரு நோயைக் குணமாக்குவது மருந்தும் மருத்துவரும் மட்டும் இல்லை.அன்பு ; நெருங்கியவர் காட்டும் அக்கறை;

இப்போது கல்யாணத்திற்கு இருக்கும் பெண்கள் பையனின் பெற்றோர் பற்றி என்ன கேட்கிறார்களாம் தெரியுமா? Are they in the hall or on the wall (உங்களுக்குச் சட்டெனப் புரிகிறதோ,  எனக்கு முதலில் புரியவே இல்லை) உன் பெற்றோர் உயிருடன் உள்ளார்களா அல்லது படமாய் சுவற்றில் தொங்குகிறார்களா என்று அர்த்தமாம்.அதிர்ச்சியாக இல்லை? நாத்தனார்கள் பற்றிக் கேட்க ,ராகு கேது உண்டா என்று கேட்கிறார்களாம்.இவர்களுக்குத் தாமும் இன்னொரு பெண்ணுக்கு ராகு கேதுதானே நம் பெற்றோரை பற்றியும் நமக்கு வரப் போகும் அண்ணி இதெல்லாம் கேட்கக் கூடும் என்று தோன்றாதா? இதெல்லாவற்றிற்கும் எது காரணம்?தன்  பற்று.சுயநலம்.இந்தப் பெண்களெல்லாம் அம்மாவானால் என்ன மாதிரியான தலைமுறை உருவாகும்?

பலரால் பலமுறை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப் பட்ட செய்திதான்.விசாலமாக மனதை ஆக்கிக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.ஒரு குழந்தை கலாசாரப்படி வளரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே அனுசரித்துப் போகும் குணம் இல்லை.பெற்றோர் தூபம் போட்டு விடக் கூடாது  ராணி மாதிரி பெண்ணை வளர்த்தோம். அவளை அனுசரித்துப் போற மாதிரி பையன் வேணும் ,குடும்பம் வேணும் என்று எப்போது பார்த்தாலும் ஒரு பக்கமாகவே பேசாமல்,என் பெண் எல்லாரிடமும் அன்பாக அனுசரணையாக இருப்பாள் என்று முதலில் சொல்லி மாப்பிள்ளை தேடுவோர் எத்தனை பேர்?

முதியோர் இல்லங்கள் பெருகியதற்குக் காரணங்கள் பல.இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்கள்,வெளிநாடுகளுக்கு தொழில் காரணமாய் இடம் பெயர வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்ரசாதமே.கொடுக்கும் பணத்திற்குத் தக்கவாறு சேவைகள் அளிக்கப் பல  இடங்கள் உண்டு.ஆமாம்,தலைமாட்டில் டங் என்று காபி கோப்பையை வைத்துவிட்டு இந்தக் கிழத்திற்கு காபி கூடக் கையில் கொடுக்க வேண்டி உள்ளது என முணுமுணு த்துக்கொண்டே முதியவர்கள் மனதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வலிக்க வைப்பதற்கு பதில் அவர்கள் நிம்மதியாக ஓரிடத்தில் இருக்க விட்டுவிடலாம்.ஆனால் அந்த முடிவு பெரியவர்களுடையதாய் இருக்கலாமே தவிர மகனுடையதாய் இருந்து விடக் கூடாது.

பெரியவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க முடியும், கோவிலுக்குச் செல்ல முடியும்,ஆனால் தன் சாப்பாட்டைக் கூடப் போய் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று மருமகளை ஒரு வேலையாள் போல நடத்தினால் தவறுதான்.மேலும் உள்ளார்ந்த அன்புடன் நடந்து கொண்டால் அது செயல்பாடுகளில் கண்டிப்பாய் தெரியும்.முடிந்த சிறிய உதவிகள் செய்யலாம்.பணமும்  பிரிவினைகளுக்கு ஒரு காரணம்.நாங்கள் போன பிற்பாடு எல்லாம் மகன்தானே எடுத்துக்கொள்ளப் போகிறான் என்று முதியவர்கள் பேசுகிறார்கள்.அது மிகத் தவறான வாதம்.இருக்கும் போது அன்பை வெளிப் படுத்துவது போல் சிறுசிறு அன்பளிப்புகள் கொடுக்கலாம்.அதுவும் மகன் செலவுகளை சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்து பெற்றோர் பணம் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது கசப்புகளையே வளர்க்கும்.


ஒரே பிள்ளையானால் சரி.ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றவர்கள் தன் குழந்தைகளுக்குள்ளேயே காட்டும் வித்தியாசமும் பிரிவுகளுக்குக் காரணம்.பெற்றோருக்கு எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான்.அதிகம் சம்பாதிக்கும் பையன்,  தன்  கருத்து தப்போ சரியோ அடித்துப் பேசத்தெரிந்த பையன்,  உள்ளே என்ன நினைத்தாலும் வெளியே பார்க்கும் போது குரலில் தேன் கலந்து அம்மா அப்பா என்று உருகும் பையன் ஆகியோரிடம்  அதிக நெருக்கம் காட்டி உண்மையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளாத பெற்றோரும் எல்லாரிடம் இருந்தும் விலகிப் போகிறார்கள்.மேலே குறிப்பிட்ட பிள்ளைகள் காரியவாதிகள்.அவர்கள் வாங்கிக் கொள்ள மட்டுமே செய்வார்கள்.செய்யும் அப்பாவிப் பிள்ளைகள் மனத்தையோ புண்படுத்தி விடுகிறார்கள். அதனால் யாரிடமும் ஒட்டுதல் இருப்பதில்லை.சாப்பாடு பற்றிய குறைகளும் உறவுகளைக் காயப் படுத்தும்.பல வருஷம் வேண்டியது சாப்பிட்டாயிற்று.அதற்காக ஒத்துக் கொள்ளாத பதார்த்தங்களைக் கூட வாயை மூடிக் கொண்டு விழுங்கச் சொல்லவில்லை.நம்மால் செய்ய முடியாத போது நமக்காக ஒருவர் செய்து தருவதை குறை சொல்லாது சாப்பிடலாம்.

 நிஜமான வயதிற்கேற்றவாறு நடந்து கொள்வது , பெரியவர்கள் வீட்டின் தூண்கள் போல,அவர்களால் நமக்கு உதவியே தவிர உபத்திரவம் அல்ல என்று இளைஞர்களுக்கு உணர்த்தலாம்.எதுவும் உறுதியாய்க் கூறவே முடியவில்லை. யார் சார்பாகவும் பேச முடியவில்லை.எல்லா வயதினரிலும் பக்குவப் பட்ட,படாத மனிதர்கள் உண்டு.சின்ன வயது முதலே வீட்டுப் பெரியவர்களிடம் நன்றாக நடந்து கொள்ளக் குழந்தைகளை பழக்குவது அவர்களை ஒரு நல்ல மனிதனாக்கும்.மாறாக பாட்டியையும் தாத்தாவையும் வெளியே தள்ளிய அம்மா அப்பாவைப் பார்த்து வளரும் மகன் தன் பெற்றோருக்கும் அதையே தருவான்.என் பெற்றோர் செய்யாததையா நான் செய்கிறேன் என்று தோன்றும்.பெண்கள் அம்மாவை பார்த்தே பாடம் கற்கிறார்கள்.தாயைப் போல் பிள்ளை.மாமியார் மாமனாரை விரட்டும் பெண்கள் தவறானவர்களோ என்னவோ அவர்கள் அம்மாக்கள் வளர்ப்பு தப்புதான்.எதற்கெடுத்தாலும் வாதம் புரிந்து எல்லோரையும் வெற்றி கொண்டதாய் நினைப்பவர்கள் வாழ்வில் தோற்று விடுகிறோம்.விட்டுக் கொடுத்து தினப்படி வாழ்வில் தோற்றுக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுகிறோம்.எது சரி?எது நல்லது?

ரஞ்ஜனி த்யாகு 

பின் குறிப்பு ; இந்த post எப்போதோ எழுதியது.நிறைய repetitions இருக்கும்.மே மாதம் இன்னும் எழுத ஆரம்பிக்காததால் இதை publish பண்ணினேன்.

MOTHER PROTECTS 

Appeared in June 2015 Manjula Ramesh's snegidhi







சனி, 25 ஏப்ரல், 2015

திருமணங்கள்-இரண்டாம் பாகம்

திருமணங்கள் பற்றிய என் கருத்துகளுக்கு சில மறுப்புகளும் சில ஒட்டிய கருத்துகளும் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளன.ஒவ்வொருவருக்கும் நான் சொல்ல வேண்டிய பதில் நீளமாய் உள்ளதால் இந்த இரண்டாம் பாகம் எழுதுகிறேன்.இதை உங்களுக்கு நான் அனுப்பும் பிரத்யேகக் கடிதமாய் கருதும் படி வேண்டுகிறேன்.என் கருத்துக்கு தீவிர மறுப்புத் தெரிவித்தவர்களுக்கு மனதில் இருந்து நன்றி.அது என்னை இன்னும் சிந்திக்கத் தூண்டுகிறது.

திருமணம் என்ற புனிதமான பந்தத்திற்கு நான் எதிரியல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்,please .ஆணுக்கும் பெண்ணுக்கும் நெறிப் படுத்தப் பட்ட ஒரு உறவை ஏற்படுத்தும் Marriage என்ற Institution ஐ கேலி பேச அந்த blog எழுதப் படவில்லை.ஸ்ருஷ்ட்டிக்காக கடவுளால் ஏற்படுத்தப் பட்ட ஒரு பந்தம் திருமணம்.அதற்கு எதிராகப் பேச அல்ப மானுடர்கள் நாம் யார்?நான் கூற வந்தது யாதெனில் திருமணத்தில் விருப்பம் இல்லாது இருப்பவர்களை விட்டு விடுங்கள்.விநோதமாக நோக்கும் அளவு அது ஒன்றும் கொலைக் குற்றம் அல்ல என்பதுதான்.ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டு திருமணத்தால் எந்த சுகமும் அடைய மாட்டோம் என்று நினைப்பவர்களை,திருமணம் பண்ணிக் கொண்டால் இரு தலைக் கொள்ளி எறும்பு போல் கஷ்டப் படுவோம் என்று ஊகித்து பயப் படுபவர்களை எல்லாம் வற்புறுத்தி" உன் பாட்டி உன் கல்யாணத்தைப் பார்த்துட்டுத்தான் போகணும்னு சொல்றா" என்றெல்லாம் blackmail பண்ணி திருமண பந்தத்தில் ஈடுபடுத்த அவசியம் இல்லை அல்லவா?அவ்வாறு pressure கொடுக்கப் பட்டு நடந்த சில திருமணங்கள் தோல்வி அடைந்ததைப் பார்த்து வருத்தம் அடைந்தே எழுதினேன்.ஆசையாக திருமணம் புரிய விரும்புபவர்கள் பண்ணிக் கொள்ளட்டும்.இணையும் இருவரில் ஒருவர் எண்ணங்கள் வேறு மாதிரியாய் இருந்தால் அவருடைய துணை வாழ்நாள் முழுதும் அன்றோ கஷ்டப் பட வேண்டி இருக்கும்?

அடுத்து செலவுகள் பற்றிய கருத்துக்கள்.செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.செலவு செய்யச் செய்ய பணம் சேரும்.பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதில்தான் கருத்து சொல்லி உள்ளேன்.ஆடம்பரத்துக்கு நான் எதிரிதான்.கல்யாணத்தில் முக்கியமான வைதிகச் சடங்குகளுக்கு செலவழிக்க மூக்கால் அழும் பலர் beautician க்கு ஆயிரங்களில் கொடுப்பது சரி என நீங்கள் நினைத்தால் ஆமாம்போடநான் தயாரில்லை.மைலாப்பூர் கபாலி கோவில் வாசலில் உட்கார்ந்து இருக்கும் ஏழை வைதிகர்களைப் பார்த்திருக்கிறீர்களா?அவர்களுக்கு சில ஆயிரம் அதிகமாகக்  கொடுத்தால் அவர்கள் கொள்ளைக் காரர்கள் என்பது போல் comment அடிக்கிறோம்.இதுவே கல்யாணமான அடுத்த வருடமே குண்டாகும் பெண்கள் தூக்கிப் பரணில் போடப் போகும் டிசைனர் பிளவுசுக்கு மறு பேச்சின்றி 4000 ரூபாய் கொடுக்கிறோம்.ஏதாவது பேசினால் டெய்லர் நேரத்துக்குத் தர மாட்டார் என்று பயம்.அப்படித்தானே?எனக்கு இதில் உடன்பாடு  இல்லை.

அடுத்து சாப்பாடு.கல்யாண சாப்பாடு போடுபவர்கள் எல்லாம் அன்னதானப் ப்ரபுவும் இல்லை.சாப்பிடுபவர்கள் ஒரு நல்ல சாப்பாட்டைக் கூடக் காணாது பஞ்சத்தில் அடிபட்டவர்களும் இல்லை.சாப்பிட உயிர் வாழ்கிறோமா இல்லை உயிர் வாழச் சாப்பிடுகிறோமா?உணவே மருந்து என்கிறார்கள்.பணம் படைத்த பாதிப் பேர்களுக்கு நினைத்தபடி சாப்பிட முடியாது ஆயிரம் health problems .மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் உண்மையா இல்லையா?இரண்டு நாளில் நாம் எட்டு வேளை சாப்பிடுவது மணப் பெண்ணின் அப்பா பர்ஸுக்கு நல்லதோ இல்லையோ சாப்பிடும் நம் வயிற்றுக்கு நல்லதில்லையே?இது common sense தானே?பாதிப் பெரியவர்களும் குழந்தைகளும் பல திருமணங்களுக்குப் பின் வயிற்று உபாதைகளுக்கு ஆளாவதைப் பார்க்கிறேன்.இருப்பவர்கள் செலவழித்தால் என்ன என்று என்னை சாடி இருக்கிறீர்கள்.இருப்பவர்கள் ஏன் இல்லாதவர்களுக்கு செலவு பண்ணக் கூடாது?எத்தனை பேர் திருமணத்தன்று ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ ஒரு முதியோர் இல்லத்திற்கோ ஒரு நாள் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்கிறோம்?அந்த இல்லங்களில் உள்ள முதியோர் திருமணத்திற்கு அழுது கொண்டே மொய் எழுத வரும் பலரை விட உங்கள் குழந்தைகளை இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்த்துவார்கள்.

Vegetable carving என்று ஒன்று இப்போதெல்லாம் வரவேற்பில் வைக்கிறார்கள்.அதன் தேவை என்ன என்று யாராவது சொல்லுங்களேன்?மலர்ச் செண்டு கொடுப்பது வெறும் ஸ்டைல் இல்லை என்று யாராவது சொல்லுங்கள்.யாரும் கேட்காது அவமதிக்கப் படும் கச்சேரிக் கலைஞர்களுக்கு கொடுக்கப் படும் பணம் அவசியமா சொல்லுங்களேன் .அர்த்தமற்ற காதைக் கிழிக்கும் சினிமாப் பாட்டு நிகழ்ச்சி எதற்காக?"கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்லே ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிகிடலாமா" என்ற பெரும் தத்துவப் பாடல் முழங்க வேண்டிய இடம்தான் நீங்கள் எல்லாம் புனிதமாக மதிக்கும் கல்யாணம் நடந்த மேடையா சொல்லுங்களேன்.அதற்காக ஒரு கம்பெனியின் எம் டி வீட்டுத் திருமணமும் ப்யூன் வீட்டுத் திருமணமும் ஒரே மாதிரி நடக்குமா என்பீர்கள்.நடக்காது.நடக்கணும் என்று சொல்லவில்லை.ஆனால் எல்லோரும் மனித இனம்.சிவப்பு ரத்தமே உடம்பில் ஓடுகிறது எனும் போது சில விஷயங்கள் பொது அல்லவா?வரவுக்கு ஏற்றாற் போல் செலவழியுங்கள்.ஆனால் பெண்ணின் அப்பா எம் டி ஆனாலும் ப்யூன் ஆனாலும் மாப்பிள்ளைகளின் அப்பாக்கள் செலவைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.Interestingly all the responses I got were from parents who don t have daughters .எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா?இதை எழுதின காக்கைக்குத் தெரியும்.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS 

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

திருமணங்கள்

சற்றுமுன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பினோம்.இப்போதெல்லாம் திருமணங்கள் சென்று வருவது பெரிய excitement ஐ ஏற்படுத்துவதில்லை.இப்போதெல்லாம் என்பது சரியா என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.சிறு வயது முதலே திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது மேலேழுந்தவாரியாய் உண்டாகும் சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தவிர வேறு மாதிரியான ஒரு உணர்ச்சியே மனதில் மேலோங்கி இருந்து வந்ததாய் உணர்கிறேன்.(சந்தோஷம் என்று குறிப்பிடுவது கூட மாமா சித்திகள் எல்லோரையும் சேர்த்து ஓரிடத்தில் பார்க்கலாம் என்பது மட்டுமே.வேறு எதுவும் இல்லை.) இந்த write up தெளிவற்று இருப்பதாய் நீங்கள் நினைக்கவும் கூடும். மனம் நினைப்பதை உண்மையாய் எழுதினால்தான் தெளிவு பிறக்கும்.ஆனால் உண்மையை சற்று refined ஆகத்தானே வெளியிட முடிகிறது?அந்த முயற்சியில் தெளிவு காணாமல் போய்  விடுகிறது.

திருமணங்களில் பிடிக்காதவற்றைப் பட்டியலிடுகிறேன்.முதலில் ஆடம்பரம்.அதனால் பெண்ணின் பெற்றோருக்கு ஏற்படும் செலவு.ஆடம்பரமாய் திருமணம் நடத்த என்ன அவசியம்?உலக வழக்கம் என்பது வெட்டிப் பேச்சு.எளிமையான திருமணங்கள் நடத்த ஏன் தயக்கம்?பிறருக்கு தங்கள் பண பலத்தைக் காண்பிக்கவா குழந்தைகள் கல்யாணத்தை நடத்துகிறோம்?கல்யாணத்திற்கு ஒரு பெண் ஒரு பையன் பெற்றோர்கள்தானே முக்கியம்?சரி ஊருடன் கூடி வாழணும் என்று தத்துவம் பேசுவார்கள்.ஊரை கூப்பிடுங்கள்.But எத்தனை வேளை சாப்பாடு போடுவீர்கள்?
உள்ளே போய் கொஞ்ச நேரத்தில் கழிவாய் வெளியேறப் போகும் விஷயத்திற்கு எத்தனை லக்ஷங்கள் செலவழிப்பீர்கள்?அடுத்து புடவை நகை.இந்தக் கால ஜீன்ஸ் யுவதிகள் முகூர்த்த நேரம் மட்டும் கட்டி பின் தொடவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் 25000த்திற்கு முகூர்த்தப் புடவை வாங்க வேண்டும்?மாப்பிளை வீட்டு pressure என்பது கதை.அப்படி ஒரு புகுந்த வீடு தேவையா நம் பெண்ணுக்கு என்று ஏன் யோசிப்பதில்லை யாரும்?

இப்படிப் பேசினால் பெண்ணை நாமே வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று தோன்றும்.அதிலும் எதுவும் தப்பில்லை.கல்யாணம் நடத்துவதும் பண்ணிக் கொள்வதும் மட்டும்தான் சாதனையா என்ன?கிருஹஸ்தாச்ரமம் சந்யாசாச்ரமம் என்று இரண்டுதான் உண்டு.சந்யாசியும் ஆகாமல் கல்யாணமும் பண்ணிக் கொள்ளாமல் இருப்பது மாபாதகம் என்று பேசுவதும் ஏனோ தெரியவில்லை.சின்ன வயதிலேயே உனக்கு இதெல்லாம் தோன்றி விட்டதா என்று கேட்கிறீர்களானால் இல்லை.அது வேறு கதை.பெண்ணை  மட்டும் திருமணம் ஏன்  பெற்றோரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பது என் சிறிய வயது மனதில் இருந்து கொண்டே வருத்திய கேள்வி.இந்த எண்ணம் தோன்றவும் ஒரு குறிப்பிட்ட வயது ஆனது.At least பெண்தான் இடம் பெயர வேண்டும் என்ற உலக வழக்கம் தெரிந்த பின்தானே எண்ணங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்? திருமணத்தின் நிறைவில் ஒரு குடும்பம் குதூகலித்துக் கொண்டு [கண்ணில் இட்ட மை கரைய அழுது கொண்டு, கலக்கத்துடன் நேற்று வரை யார் எனவே தெரியாத ஒருவன் பின்னால் வரும்] பெண்ணை கடத்துவது போல் கூட்டிச் செல்ல அத்தனை சுமைகளையும் ஏற்றுத் திருமணத்தை நடத்தி முடித்த பெண்ணின் பெற்றோர் பெண் அங்கே போய் எப்படி நடத்தப் படுவாளோ என்ற கலக்கத்துடன் வழி அனுப்பும் காட்சிகள் I have hated .

இவை எல்லாம் சேர்ந்து ஒரு mixed emotions தான் இன்று வரை திருமணங்கள் சென்று வந்தால் எனக்கு ஏற்படுகிறது.பட்டுப் புடவைகளும், பகட்டும், சினிமாப் பாடல்களின் உரத்த சப்தமும், வீணாகும் உணவும் ,அனாவசியமாய் மலர்ச்செண்டுகள் பெருமைக்காக அளிக்கப் பட்டுத் தூக்கி எறியப் படுவதும் ,நூற்றுக் கணக்கில் க்ளிக் செய்யப் படும் புகைப்படங்களும், மற்ற நாள்களில் ஏன் என்று கூடக் கேட்காத உறவுகள் சும்மாவேனும் அந்த இரண்டு நாட்கள் மட்டும்  கட்டித் தழுவிக் கொள்வதும் மொத்தத்தில் உண்மையை விட நடிப்பே ப்ரதானமாக நடத்தப் படும் திருமணங்கள் வியப்பையும் சலிப்பையுமே உண்டாக்குகின்றன.இப்போது பையனின் பெற்றோர்கள்தான் பயப்படுவதாய் சொல்கிறார்கள்.பெண்கள் பையனின் பெற்றோர் பற்றிக் கேட்க,They are in the hall or on the wall எனக் கேட்கிறார்களாம்.உண்மையாய் இருக்கலாம்.ஆனால் நான் கேள்விப் பட்ட வரையில்  திருமணங்களில் பையன் வீட்டார் வைத்ததுதான் சட்டம்  என்பது போல்தான் உள்ளது..செலவுகளைக் குறைத்து,பகிர்ந்து கொண்டு  நடத்தினால்தான் பெண் தருவோம் என ஒருவராவது   சொல்ல மாட்டார்களா? இல்லை அவர்களே விரும்பித்தான் இந்த ஆடம்பரங்களுக்கு உடன்படுகிறார்களா?தூக்கம் கண்களைத் தழுவுகிறது.இன்று சென்று வந்த கல்யாணத்தால் இணையும் இருவரும் நன்றாக இருக்கட்டும் என்ற ப்ரார்த்தனையுடன் Good Night சொல்லிக் கொள்கிறேன்.எப்படியோ ரெண்டு பேரையும் மாட்டி விட்டாயிற்று.அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தால் மகிழ்ச்சி.மற்ற என் புலம்பல்கள் அவர்களுக்குத் தேவையற்றதே.

ரஞ்ஜனி த்யாகு 

MOTHER PROTECTS 

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

On the nature of success

There have been numerous attempts to define success. This is what Wikipedia, arguably the largest online encyclopedia, has to say about success (1) - attainment of higher social status, achievement of a goal, the opposite of failure (in this particular order). The last of the three definitions seemed to be a rather queer way of defining success. This probably mirrors the popular perception that success is the  absence of failure. It is commonly acknowledged that success means different things to different people, though a good section of the Indian populace have pathetically narrow conceptions of success and betray an unwillingness and rigidity to expand their worldviews. The quintessential Indian parent has an unshakable faith in the infallibility of the IIT-MS_in_US and the IIT-IIM combinations in churning out "successful" individuals and it would be downright sacrilegious to suggest even the slightest deviation from this divine path. The rest of the post sketches my Utopian dream of an ideal perception of success.

J.K Rowling, the famous author and mother of the fictional boy wizard Harry Potter, expressed in one beautiful sentence the role of failure in life -  
"It is impossible to live without failing at something, unless you live so cautiously that you might as well not have lived at all – in which case, you fail by default."  (2)
A rigid dichotomy between success and failure governs societal perceptions. The human mind struggles to see success and failure in the same spirit. As Sri Aurabindo holds, reason divides and separates (3). In the womb of every failure is hidden the potentiality of a success, and behind every success lurks a failure that spurs greater success. Lives of giants attest this selfsame fact and there is even a tinge of melancholic euphoria (a beautiful phrase that I came across recently) associated with such stories - what sacrifices and apparent failures lie behind that phenomenal success! If only we could remove the veil of superficiality that envelopes our perceptions, to what great heights might not our minds soar!

In the following discussion it would be expedient to rope in the idea of travel and compare it with the road to success. Success is like a souvenir that you collect as you travel. Remember that you do not travel to procure souvenirs, nor do you stop travelling having pocketed a particularly costly one. You continue to travel not because you wish to buy more, but to explore further. The joy is in discovery. At each new destination you collect a new souvenir. Though you fondly cuddle your souvenirs in silent retrospection, it is the experience and learning that preceded the purchase that you respect the most. Incontrovertibly travel is loads more fun than the souvenir. Each time you look at it, your heart will skip a beat and your mind will undoubtedly rejoice at the great experience. What a  wonderful trip! Never will it proclaim, looking at the souvenir – what a great purchase this was, so lovely and much costlier than what my neighbour managed.

To conclude the analogy, travel as much as you wish, pick up many a souvenir on your way but let that not be your goal, for travel will then become a burden. The world has not seen a traveller who has had this as his goal, the reason being that each one who has succeeded knows how invaluable the path that led him to success actually is. He who knows not this profound secret has not tasted success or is under a trance: the magnificence of the treacherous souvenir beguiled him so much that he has permitted it to entrust him into the hands of complacence. Entrenched in his inflated ego, he flounders in the dark. Let the Divine find this wretched being and deliver him from the curse that he has wrought upon himself.

PS : Needless to say, I am quite aware that I would in all probability be tagged a hypocrite in days to come, at which point even I may not be able to deny that allegation. This piece has been addressed to my ideal self and the general reader may completely deny my ramblings. We shall agree to disagree.

Let thy will be done

பின் குறிப்பு : இந்த Post என் son கார்த்திக் எழுதியது.இதைத் தமிழ்ப் படுத்தவே முதலில் எண்ணினேன்.ஆனால் எழுதுபவர்களின் spirit , translation ல் miss ஆகிவிடும் என்பதால் அப்படியே publish செய்யப் பட்டுள்ளது.




செவ்வாய், 14 ஏப்ரல், 2015

Power Distance Index

பவர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அதிகாரம் எனப் பொருள் கொள்ளலாம்.ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கினால் அதிகாரம் தலைவனிடம் (சில வீடுகளில் தலைவியிடம்)உள்ளது. பள்ளிகளில் தலைமை ஆசிரியர்.வங்கியில் மானேஜர் ,தொழிற்சாலைகளில் மானேஜிங் டைரக்டர் நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் அல்லது அதிபர் இப்படி பட்டியல் தொடரும்.இந்த எழுத்து அதிகார வர்கத்தில் உள்ளவர்களுக்கும் அவர்கள் கீழே உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அலசலே.எதுவும் எழுத்தில் வர ஏதோ ஒன்று நம்மைத் தூண்ட வேண்டும்.எனக்கு அந்தத் தூண்டுதலாய்  அமைந்த நிகழ்வு என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.ஏனெனில் தனி மனித வழிபாடும் எளிய மக்கள் தங்களுக்கு மேலே உள்ளவர்களை அணுக இயலாது தவிக்கும் தவிப்பும் நம் நாட்டில் புதிதல்ல.கொஞ்ச நேரம் உற்று கவனித்து உலகைப்  பார்த்தால் நாம் அனைவரும் எழுத்தாளர்கள்தான்.


POWER DISTANCE INDEX என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் படும் சொல் தொடரைத் தமிழ்ப் படுத்துவதை விட PDI என்று குறிப்பிட்டுக் கொள்வோம்.ஒவ்வொரு நாட்டு பாரம்பரியத்தை ஒட்டி அந்த நாட்டின் PDI அதிகமாகவோ குறைவாகவோ உள்ளது.நம் இந்தியாவின் PDI மிக அதிகம்.
U S A ன் PDI மிகவும் குறைவு.இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை?அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் இருக்கும் இடைவெளி அதிகம் உள்ள நாடுகள் PDI அதிகமுள்ள நாடுகளாய்க் கருதப் படுகின்றன.விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் ,அரசியல்வாதிகள் நம் நாட்டில் கொண்டாடப் படுவது போல் வேறெங்கு கொண்டாடப் படுகிறார்கள்?மத குருமார்களைக் கூட ஒரு லெவலுக்குப் பிறகு நம்மால் நெருங்க முடியாது.உண்மையைச் சொல்லப் போனால் நாம் எதேனும் குறிப்பிட்ட Spiritual Belief வைத்துக் கொண்டிருந்தால் அதை மனதுடன் வைத்து கொள்வதே மேல்.ஒரு cult ல் நம்பிக்கை வைத்து மடத்திற்கோ கோவிலுக்கோ செல்பவர்கள் தலைமைப் பீடத்தில் உள்ளவர்களை நெருங்கக் கூட இடையில் உள்ளவர்கள் விட மாட்டார்கள்.எல்லாவற்றையும் துறந்தவர்களே இப்படி என்றால் மற்றவர் பற்றிப் பேச என்ன உள்ளது?

சமூகத்தில் எல்லோரும் சமம் என்ற கொள்கை நமக்குக் கிடையாது.அதிகாரம் சமமாக இல்லை- இருக்க முடியாது- அது தேவையும் இல்லை என்பது நம் கலாச்சாரம்.கம்பெனிகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றையும் Boss உத்தரவின் படி செய்தே நமக்குப் பழக்கம்.வேலை கொடுப்பவர்களுக்கும் வேலை பார்ப்பவர்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நமக்கு இயல்பாகிப் போன ஒன்றே.தனக்கு ஒரு படி மேலே உள்ளவர்களை வேண்டுமானால் guidance க்காக அணுக முடியும்.அதற்கும் மேலே உள்ளவர்களைப் பார்ப்பதும் அரிதே.Work Life ல் மானேஜ்மெண்ட்டுக்கு பணிவான பணியாளர்களே தேவை.பழைய காலத்தில் நல்ல செய்தி கொண்டு வரும் பணியாளுக்கு ராஜா முத்துமாலை பரிசளிப்பது போல loyal ஆக உள்ளவர்களுக்கு incentive வழங்கப் படும்.கட்டுப் படுத்தப் படுவதை நம்மில் பலர் ரசிக்கிறோமோ இல்லையோ ஆனால் வெறுப்பதில்லை.ஏணிப் படியின் மேலே உள்ளவர்களுக்கு,கீழே உள்ளவர்கள் எதையும் சொல்லிப் புரிய வைப்பது மிகக் கடினம்.நம்முடையது Male dominated society ம் கூட.வீடுகளில் பொதுவாய் சிதம்பர ராஜ்ஜியம்,திருமணங்களில் பிள்ளை வீட்டுக்காரர்களின் domination .இப்போது எல்லாம் மாறிவருகிறது என்று சொல்கிறோம்.ஆனால் பெண்ணுடைய பெற்றோர்தானே வாழ்நாள் சேமிப்பின் பெரும் பகுதியைச் செலவழித்துத் திருமணம் நடத்துகிறார்கள்?வீட்டில் இருந்து நாடு வரை அதிகாரம் செய்பவர்கள்,அதைக் கேட்டுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.மாற்றம் வருமா தெரியாது.

நம்மை விடவும் PDI அதிகம் உள்ள நாடுகளும் உள்ளன.கொலம்பியா ஒரு உதாரணம்.பிரேசில் தென் கொரியா மெக்சிகோ பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும்தான்.அமெரிக்காவிற்கு அடுத்தபடி அயர்லாந்த் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து எல்லாம் PDI குறைவான நாடுகள்.இன்று ஒரு நண்பருடன் இது பற்றிப் பேச நேர்ந்தது.சமூகத்தின் மேல் நிலையில் அல்லது ஒரு குடும்பத்தின் தலைவனாய்  உள்ளவர்கள் தமக்குக் கீழே உள்ளவர்களின் கருத்துக்களை முதலில் கேட்டறியும் வழக்கம் மஹாபாரத காலத்தில் இருந்தே இருந்து வருவதாய்க் கூறி ஒரு கதையும் கூறினார்.தர்மபுத்திரர் ஒரு முறை ஏதோ விஷயத்தில் கருத்து கூற வேண்டியிருந்த போது தம்பிகள் என்ன சொல்கிறார்கள் என அறிய விரும்பி முதலில் சஹாதேவனைக் கேட்டாராம்.ஏனென்றால் தான் ஏதாவது சொன்னால் அதை தம்பி தவறாயினும் மறுதலிக்க மாட்டான் ,அதனால் முதலில் அவன் சொல்வதைக் கேட்டறிவோம் என்ற எண்ணமாம்.என்னைப் பொறுத்த வரை High PDI உள்ள இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றிரண்டு தருமபுத்திரர்கள் இருந்தாலும் கீழே உள்ள சஹாதேவர்கள் அண்ணனுக்கு எது பிரியம் என்று ஊகித்து அறிந்து முடிந்தவரை அவனுக்குப் பிரியமானதையே தன் பதில் போல் கூறுவார்கள்.மன்னனுக்கு இடித்துரைத்த மந்திரிகள் இருந்திருக்கிறார்கள்.இப்போதும் கருத்துக்கள் கேட்கப் படுகின்றன.ஆனால் distinct ஆக அதிகார வர்க்கம் ஒன்றும் ஆமாம் போடும் வர்க்கம் ஒன்றும்தான் நான் கண்ட இந்தியாவில் உள்ளன.


எரிச்சல் உண்டாக்கும் அளவுக்கு PDI அதிகமே,நம் நாட்டில்.HERO WORSHIP ஹீரோக்களைத்தானே பண்ண வேண்டும்? அதற்குத் தகுதியானவர்களை மட்டுமா கொண்டாடுகிறோம்? மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம்?நெருங்கவே முடியாத அளவு நம்மை விட இன்னொரு ஜீவன் ஏன் உசத்தி? PDI குறைவான நாடுகள் என்ன கெட்டுப் போயிற்று? உண்மையில் நாம் மிக மதிக்கும் ஒருவரை நெருங்கித் தொடர்பு கொள்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? நம் நாட்டில் அப்படியே உல்டா.நமக்கு மனதுக்கு நெருங்கிய ஒருவரை நடுவில் உள்ள பலரைத் தாண்டி ஒருக்கால் நெருங்கினாலும் அவருடைய உண்மை முகத்தின் தரிசனத்தைத் தாங்குவோமா தெரியாது.இந்த topic நீளமானது.We shall have another part .Please reserve comments till then .(இது தவறாமல் கருத்து சொல்லும் என் dear friends க்கு )


ரஞ்ஜனி த்யாகு



MOTHER PROTECTS 

வியாழன், 9 ஏப்ரல், 2015

மறைவுக்கு நாள் குறிக்கப் பட்டுவிட்ட மணி ஆர்டர்

மணிஆர்டர் சேவைகள் நிறுத்தப் பட நாள் குறித்தாயிற்று.அதை செய்திகளில் கேட்டு விட்டு என்னால் உங்களுடன் பேசாமல் இருக்க இயலுமா?தந்திச் சேவையும் இப்படி ஒரு நாள் திடீரென நின்று போனது.அஞ்சலகமே இல்லாது  போகுமா,தெரியவில்லை. ஆனால் இன்டர்நெட் சென்றடையாத குக்கிராமங்கள் இன்னும் உள்ளன.அவைகள் என்ன செய்யும் இதெல்லாம் எனக்கு விவரம் தெரியவில்லை.இது போன்றதொரு சேவையின் முடிவு,காணாமற் போன பல விஷயங்கள் மாதிரி மனதைத் தொடுவதால்  கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணுகிறேன்.மற்றபடி என்ன செய்வது?நம் பேரப் பிள்ளைகளிடம் எங்க காலத்தில் மணி ஆர்டர் என்று ஒன்று இருந்தது தெரியுமா என்று சில வருஷங்கள் கழித்துக் கதை பேச வேண்டியதுதான்.

சில செய்திகள் சேகரித்தேன்.130 வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்து வரும் சேவை.ஆனால் eM O ,i M O ஆகியவை உண்டாம். Electronic money order ,Instant money order.  உண்மையில் நம் வேலை இன்னும் எளிதாக்கப் பட்டுள்ளது.என்ன personal touch கொடுக்க நாலு வரி எழுதுவோமே அது முடியாது.standard message தான்.அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.கைபேசி இல்லாத மக்கள் ரொம்பக் குறைவான பேர்தான்.விஷயத்தைச் சொல்லி விட்டு பணத்தைeM O செய்ய வேண்டியதுதான்.இதுவும் அஞ்சலகம் சென்றுதான் செய்ய வேண்டும் ஆதலால் பொதுமக்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை.

மணி ஆர்டரைக் கொஞ்சம் மறந்து விட்டு மனிதர்களுக்கு வருவோம்.மணிஆர்டர் போல்தான் மனிதர்களான நமக்கும் ஒரு நாள் குறிக்கப் பட்டுள்ளது.மனிதன் குறித்த நாள் தெரிந்து விடுகிறது.இறைவன் குறித்த நாள் மறைபொருளாய் உள்ளது.முடிவு உண்டு என்று தெரிந்தும் தெரியாதது போல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதது போல் நடந்து கொள்கிறோம்.நான் எனக்கேதான் சொல்லிக் கொள்கிறேன்.அதை உங்களிடம் பகிர மட்டுமே செய்கிறேன்.செய்ய வேண்டியவை இன்னும் எவ்வளவோ உள்ளன..Miles to go before I sleep ன் தமிழாக்கம் மாதிரி தெரிந்தால் நான் என்ன செய்ய?Robert Frost  நினைத்தது போல நாமும் நினைக்கக் கூடாதா? ஒவ்வொரு வினாடியும் உபயோகமாய்ச் செலவழிக்க வேண்டியதே.திரும்பிப் பார்ப்பதற்குள் நாட்கள் கடந்து போய் விடும்.அனாவசியமாக யோசிக்க,விவாதிக்க நேரம் இல்லை.எந்த விஷயத்திற்கும் மனச் சோர்வடைவதும் தேவையற்றதே.Depression kills a person . ரோஜாச் செடியின் முள் போல எல்லாம் கலந்ததுதானே வாழ்க்கை? நாத்திக வாதம் பேசுவோர் கூட மறுக்க இயலாத ஒன்று உண்டென்றால்,நமக்கு வாழ்க்கை அளித்துச் செல்லும் நல்ல,மற்ற எதற்கும் நாம் பொறுப்பில்லை.ஏதோ நமக்கப்பாற்பட்ட சக்தியால் நடத்தப் படுகிறோம்.அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது மட்டுமே நம் கையில் உள்ளது.இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது.அவன் தடுப்பதை வேறு யாரும் கொடுக்கவும் முடியாது. பின் எதற்கு சஞ்சலம்?

நமக்கு நடக்கும் நல்லதிற்கு நாமே காரணம் போல ரொம்பக் குதூகலிக்கவும் தேவையில்லை.அதிகப் படியான சந்தோஷம் வருத்தம் இரண்டும் வாழ்வின் சமநிலையை பாதிக்கவே செய்கின்றன.மண்ணாந்தை மாதிரி உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டாம்.ஆனால் உணர்சிகளே உருக் கொண்டது போலும் நடந்து கொள்ள வேண்டாம்.நாலணா காயினை, தந்தியை, இதோ ,மணி ஆர்டரை ,கடிதம் எழுதுவதை, பெண்கள் பாவாடை தாவணியை ,கல்லுரல், அம்மியை, விறகடுப்பை, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வருவதை இன்னும் எத்தனை எத்தனை விஷயங்களைச் சவுகரியமாய் மறந்தாயிற்று? ஏன் மறந்தோம்?இப்போ அது தேவை இல்லை.அதன் இடத்தை இட்டு நிறப்ப வேறொன்றுள்ளதால்.அதே போல தேவை இல்லாதவை வாழ்க்கையில் இருந்து தானே போய் தேவையானது எஞ்சி நிற்கிறது.ஒன்று  நமக்குத் தேவையா இல்லையா என்ற முடிவை இறைவன் நம்மிடம் விடுவதில்லை.அவனிடமே வைத்திருக்கிறான்.சில சமயங்களில் அது நம்மை வருத்துகிறதுதான்.நாம் ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதர்கள்தானே? நம்முடையது very very limited vision . கண்டிப்பாய் அவனது தீர்ப்புதான் நம்முடையதை விடச் சரியாக இருக்கும்.அதனால் நல்லது நடக்க வேண்டும் என்பதை விட,நடப்பதெல்லாம் நல்லதற்கே இருக்கட்டும் என்பதே சரியான பிரார்த்தனை.அணுகுமுறையும்.

இன்று இதை எழுத என்ன காரணம்?சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான்.சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்.நேற்று நான் எஜமான் (எஜமானி?)ஸ்தானத்தில் இருந்து சற்றே இறங்கி என் பேச்சை எனக்கு எஜமானாக விட்டுவிட்டேன்.இப்படித்தான் பலநாள் கஷ்டப் பட்டு சேர்த்ததை (சேர்த்த நல்ல அனுபவங்கள்,composure ,I mean )  ஒருநாளில் ,சிலவேளை ஒரு நிமிடத்தில் இழந்து விடுகிறாற் போல் ஏதான நடந்து விடும். அதன் விளைவு மனச் சோர்வு.அதன் விளைவு எழுத்து. surf excel விளம்பரத்தில் கறை நல்லதுதான் என்பது போல் எழுத்து நல்லதுதானே?  அப்போ,எழுது முன் ஏற்பட்டு எழுதிய பின் மறைந்த மனச்சோர்வும் நல்லதுதான்.அதான் முன்னமே சொன்னேன் நடந்த எல்லாம் நன்றே.Bye Bye 

ரஞ்ஜனி த்யாகு 

Mother Protects